சென்னை: இந்தத் தேர்தலில் தி.மு.க.வின் பிரசாரப் பீரங்கியாகக் கருதப்பட்ட வடிவேலு அ.தி.மு.க. வெற்றி பெற்றதால் பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளார். அவரது வீட்டு முன் பெரும் பொலிஸ் படையே குவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க. கூட்டணிக்கு குறிப்பாக விஜயகாந்துக்கு எதிராக கடுமையான பிரசாரத்தை மேற்கொண்டார் வடிவேலு. விஜயகாந்த் கட்சி இந்தத் தேர்தலோடு காணாமல் போகும் என்றார். விஜயகாந்த் குடித்துவிட்டு உளறுவதாக கடுமையாகச் சாடினார். ஆனால் ஜெயலலிதாவை மட்டும் அவர் திட்டவில்லை. தேர்தல் முடிந்த பிறகும் வடிவேலுவின் வாய்த்துடுக்கு அடங்கவில்லை. அ.தி.மு.க.வுக்கு வாக்களித்த ரஜினியை சீண்டும் வகையில் பேட்டி கொடுத்தார். முடிவுக்குப் பிறகு எல்லாமே மாறும். அப்போது பேசிக் கொள்கி÷றன் என்று கூறினார். ராணா படத்தில் தன்னை நீக்கியதற்கு பதிலடியாக.
தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. அ.தி.மு.க. அபார பெரும்பான்மையுடன் ஆட்சியைப்பிடித்துள்ளது. வடிவேலுவால் விமர்சிக்கப்பட்ட விஜயகாந்தும் பெரும் வெற்றி பெற்றுள்ளார். அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் என்று கூறப்படும் அளவிற்கு அவரது நிலை உயர்ந்துள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே பகையாளிகளாக இருந்த வடிவேலுவுக்கும் விஜயகாந்துக்கும் மோதல் முற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வடிவேலுவை சினிமா உலகம் ஒதுக்க ஆரம்பித்துள்ள நிலையில், அவர் எதிர்த்துப் பிரசாரம் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்திருப்பதால் வடிவேலுவின் சினிமா வாழ்க்கையே அஸ்தமித்து விட்டதாக பலரும் பேசிக் கொள்கின்றனர்.
இன்னொரு பக்கம் வடிவேலு மீது விஜயகாந்த் ரசிகர்களும் சிங்கமுத்து ரசிகர்களும் கோபமாக உள்ளார்களாம். எனவே, அவரது வீட்டுக்கு முழு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விருகம்பாக்கத்தில் உள்ள வடிவேலு வீட்டைச் சுற்றிலும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அருகில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கும் பொலிஸ் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது. வீண் கலாட்டாவைத் தவிர்க்க வடிவேலுவை கொஞ்ச நாள் வெளியூரில் இருக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
நன்றி: தட்ஸ்தமிழ்
தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. அ.தி.மு.க. அபார பெரும்பான்மையுடன் ஆட்சியைப்பிடித்துள்ளது. வடிவேலுவால் விமர்சிக்கப்பட்ட விஜயகாந்தும் பெரும் வெற்றி பெற்றுள்ளார். அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் என்று கூறப்படும் அளவிற்கு அவரது நிலை உயர்ந்துள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே பகையாளிகளாக இருந்த வடிவேலுவுக்கும் விஜயகாந்துக்கும் மோதல் முற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வடிவேலுவை சினிமா உலகம் ஒதுக்க ஆரம்பித்துள்ள நிலையில், அவர் எதிர்த்துப் பிரசாரம் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்திருப்பதால் வடிவேலுவின் சினிமா வாழ்க்கையே அஸ்தமித்து விட்டதாக பலரும் பேசிக் கொள்கின்றனர்.
இன்னொரு பக்கம் வடிவேலு மீது விஜயகாந்த் ரசிகர்களும் சிங்கமுத்து ரசிகர்களும் கோபமாக உள்ளார்களாம். எனவே, அவரது வீட்டுக்கு முழு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விருகம்பாக்கத்தில் உள்ள வடிவேலு வீட்டைச் சுற்றிலும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அருகில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கும் பொலிஸ் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது. வீண் கலாட்டாவைத் தவிர்க்க வடிவேலுவை கொஞ்ச நாள் வெளியூரில் இருக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
நன்றி: தட்ஸ்தமிழ்
No comments:
Post a Comment