சென்னை திரும்பினார் கனிமொழி | ![]() | ![]() | ![]() |
புதன்கிழமை, 11 மே 2011 23:19 ![]() |
சென்னையில் உள்ள வருமான வரித்துறை முன்பு ஆஜராவதற்காக, கனிமொழி சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கினார். அவரோடு சரத்குமார், அவரது கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யா ஆகியோரும் வந்திருந்தனர். டெல்லி சென்று திரும்பிய வீர மங்கை கனிமொழியை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு, அவரது தாயார் ராசாத்தி அம்மாள், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பூங்கோதை, தா.மோ.அன்பரசன் ஆகியோர் விமான நிலையம் வந்திருந்தனர். மாநிலப் போலீசார் முழு அளவில் குவிக்கப் பட்டு, கனிமொழியிடம் பத்திரிக்கையாளர்கள் பேசாத வண்ணம் தடுத்தனர். |
No comments:
Post a Comment