நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Tuesday, May 24, 2011

அழகிரி கோட்டையில் ஓட்டை!

மதுரை சத்யசாயி நகரில் இருக்கிறது மு.க.அழகிரியின் வீடு. சாதாரணமாக இந்த ஏரியாவில் எந்த வாகனமும் நுழைய முடியாது; அவ்வளவு கெடுபிடிகள். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியானபோதே, மூன்று ஆட்டோக்களில் வலம் வந்தவர்கள், அ.தி.மு.க. வெற்றிக்கு ஆதரவு கோஷம் எழுப்பிவிட்டுப் போனார்கள். சத்யசாயி நகருக்கு இப்போதுதான் சுதந்திரம் கிடைத்து இருக்கிறது! திருமங்கலம் இடைத் தேர்தல் வெற்றிக்குப் பரிசாக, மு.க.அழகிரிக்கு தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியைக் கொடுத்தது கட்சித் தலைமை. தென் மண்டலத்தில் உள்ள 58 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அழகிரிதான் பொறுப்பாளர். திருமங்கலம் ஃபார்முலாவைப் பயன்படுத்தி, தெற்கில் அடுத்தடுத்து நடந்த நான்கு இடைத் தேர்தல்களிலும் தி.மு.க. கூட்டணியை ஜெயிக்கவைத்து, 'இடைத் தேர்தல் நாயகர்’ ஆனார் அழகிரி. அதனால், பொதுத் தேர்தலிலும் அவரை மலைபோல் நம்பியது தி.மு.க. தலைமை. அதற்காகவே, அவர் அடையாளம் காட்டிய நபர்களுக்கு எல்லாம் ஸீட் கொடுக்கப்பட்டது. ''தென் மாவட்டங்களில் 45 தொகுதிகளுக்கு மேல் தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும்!'' என வாக்குச் சாவடி வாசலிலேயே வாக்குக் கொடுத்தார் அழகிரி. ஆனால், 12 தொகுதிகளைப் பிடிப்பதற்கே, தி.மு.க. கூட்டணிக்கு நுரை தள்ளிவிட்டது. தென் மண்டலத்தில், மற்ற எட்டு மாவட்டங்களில் குறைந்தது ஒரு தொகுதியிலாவது தி.மு.க. ஜெயித்து இருக்கிறது. ஆனால், அழகிரியின் தலைமை பீடமான மதுரை மாவட்டத்தில் போட்டியிட்ட 10 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி மண்ணைக் கவ்வியது.

பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்த செயலாளர்களான சுப.தங்கவேலன், கே.ஆர்.பெரியகருப்பன், ஐ.பெரியசாமி போன்றவர்கள் எல்லாம் ஜெயித்து இருக்கும்போது, மதுரை மாநகர், புறநகர் மாவட்டச் செயலாளர்கள் இருவரையும் கங்கணம்கட்டி தோற்கடித்து இருக்கிறார்கள் மதுரை மக்கள்.

இது அழகிரி கனவிலும் எதிர்பார்க்காத முடிவு.

''மதுரை மாவட்டத்தில், மேலூர், மதுரை கிழக்கு, மேற்கு, மத்தி ஆகிய தொகுதிகளில் வெற்றி நிச்சயம்!'' என்று முழங்கினார்கள் அழகிரியின் விசுவாசிகள். ஆனால், அழகிரி வசிக்கும் மதுரை மேற்குத் தொகுதியில்கூட தி.மு.க. ஜெயிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அழகிரி, ''அரசு ஊழியர்களை நம்பினோம். அவங்க நமக்கு தேனைத் தடவிட்டாங்க. பணத்தை வாங்கிக்கிட்டு எல்லோரும் துரோகம் பண்ணிட்டாங்க. என்கிட்ட உண்மை நிலவரத்தைச் சொல்லாம மறைச்சிட்டாங்க...'' என்று சத்தம் போட்டாராம்.

''காலம் கடந்து ஞானம் பிறந்து இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் ஓட்டுக்கு 500 கொடுத்தார்கள். ஆனாலும், அழகிரி எதிர்பார்த்த ஓட்டு விழவில்லை. அந்தத் தேர்தலுக்குப் பிறகு தன்னை மக்கள் தொண்டனாகக் காட்டிக்கொள்ள, மனு வாங்கும் படலம் உள்ளிட்ட வைபோகங்களை நடத்தினார் அழகிரி. சில மனுக்களுக்கு தீர்வும் சொல்லப்பட்டது. அழகிரியிடம் மாற்றம் தெரிந்தாலும், அவரைச் சுற்றி இருப்பவர்கள் மாறவே இல்லை. எதற்கெடுத்தாலும் அழகிரியை முன்னிலைப்படுத்தித் தங்களை வளப்படுத்திக்கொண்டவர்கள், ஒசைப்படாமல் அவரது அரசியல் அஸ்திவாரத்துக்கும் ஆப்படித்தார்கள்!'' என்கிறார்கள் மதுரையின் விவரமான உடன்பிறப்புகள்,

சொத்துகளை மிரட்டி வாங்க ஒரு கூட்டம் அலைந்தது. தனியாக வசிக்கும் தம்பதியைத் தேடிப் பிடித்து அவர்களிடம், 'உனக்கென்ன புள்ளையா குட்டியா... பேசாம நாங்க குடுக்குறதை வாங்கிக்கிட்டு கையெழுத்தைப் போடு!’ என்று மிரட்டியே மதுரைக்குள் ஏகப்பட்ட சொத்துகளை அடித்துப் பறித்தது இந்தக் கூட்டம். மதுரை மாவட்டத்தில் எந்த ஏரியாவில் பத்திரப் பதிவு நடந்தாலும், சம்பந்தப்பட்ட நபர்களிடம் கமிஷன் வாங்க ஒரு கூட்டம். 25 லட்சத்துக்கு மேல் சொத்து வாங்கினால், அதற்கான 'கட்டிங்’கை இந்தக் கும்பலுக்குக் கொடுத்தால்தான் பத்திரம் பதியவே முடியும்.

தென் மண்டல ஐ.ஜி. அலுவலகம் மதுரையில் இருப்பது பலருக்குத் தெரியும். ஆனால், தி.மு.க-வினரால் நடத்தப்பட்ட தென் மண்டல டி.ஜி.பி. அலுவலகம் ஒன்றும் மதுரையில் இருந்தது. தென் மாவட்டங்களில் எந்த போலீஸ் அதிகாரியை எந்த ஸ்டேஷனுக்கு டிரான்ஸ்ஃபர் போட வேண்டும்; எந்த அதிகாரியை மதுரைக்குக் கொண்டுவர வேண்டும் என்று முடிவெடுப்பது இங்குதான். நேர்மையான அதிகாரிகள் பலர் பந்தாடப்பட்டார்கள்.

மதுரை வடக்குத் தொகுதியில் அரசு ஊழியர் ஓட்டுகள் 30 சதவிகிதம் இருக்கிறது. போலீஸ் குடியிருப்புகளும் இதற்குள்தான் வருகின்றன. போலீஸ் குடும்பங்களும் அரசு ஊழியர்களில் கணிசமானவர்களும் தி.மு.க-வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த காரணத்தால்தான், அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் 46,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தார்.

எதற்கெடுத்தாலும் அழகிரியின் பெயர் 'மிஸ்யூஸ்' பண்ணப்படுவதால், போலீஸில் கொடுக்கப்படும் புகார்களுக்கும் நடவடிக்கை இல்லாமல் போனது. எந்தப் பிரச்னை என்றாலும், புகார் கொடுத்தவர்களை போலீஸே மிரட்டி பைசல் பண்ணிவிடும். பொதுமக்களுக்கு மட்டும் அல்ல... போலீஸுக்குப் பிரச்னை என்றாலும் இப்படித்தான் நடந்தது.

ஐந்து மாதங்களுக்கு முன்பு தெற்கு வாசல் அருகே பள்ளிவாசல் ஏரியாவில் பணியில் இருந்த டிராஃபிக் இன்ஸ்பெக்டர் ஒருவர், குடிபோதையில் ஒரே பைக்கில் வந்த மூவரைப் பிடித்து வழக்குப் போட முயன்றார். விஷயம் தெரிந்து அடியாட்களுடன் காரில் வந்த தி.மு.க. அதிரடிப் பிரமுகர், இன்ஸ்பெக்டரை அடித்து உதைத்துக் கீழே தள்ளிவிட்டு, குடிபோதை ஆட்களை மீட்டுப்போனார். உடனே, விஷயத்தை அப்போது இருந்த கமிஷனரிடம் கொண்டுபோனார், இன்ஸ்பெக்டர். ''இதென்ன கொலை கேஸாய்யா..? அந்தாளுதான் கட்சிக்காரன்னு சொல்லி இருக்கான்ல. பேசாம விட வேண்டியதுதானே?'' என்று ஏச்சு விழுந்ததாம்.

இது இப்படி என்றால்... மாநகராட்சி கவுன்சிலர்களும் பண வேட்டையில் இறங்கினார்கள். விளம்பர நிறுவனங்​கள்கூட தொழில் செய்ய முடியாதபடி, அண்ணன் பெயரைச் சொல்லி ஆட்டம் போட்டது ஒரு கூட்டம். மாநகருக்குள் அழகிரி பெயரைச் சொல்லி தி.மு.க-வினர் செய்த அடாவடிகளை, புறநகரில் ஒன்றியச் செயலாளர்கள் அந்தஸ்தில் இருப்பவர்களும் செய்ய ஆரம்பித்தார்கள். இந்த சமாசாரங்களை எல்லாம் கண்டும், காணாததுபோல் இருந்ததால்தான் அழகிரிக்கு இப்படி ஒரு பின்னடைவு!

அ.தி.மு.க. கோட்டையான கொங்கு மண்டலத்தில்தான் வாக்கு வித்தியாசம் 30,000, 40,000 என்று இருக்கும். இந்தத் தேர்தலில் மதுரை மாவட்டத்திலும் அ.தி.மு.க-வுக்கு அவ்வளவு பெரிய ஓட்டு வித்தியாசம் கிடைத்தது. மதுரை மாவட்டத்தில் 16,000 முதல் 48,000 வரை வித்தியாசத்தில் வென்று இருக்கிறது அ.தி.மு.க. கூட்டணி.

மதுரை தெற்குத் தொகுதியில், புதுமுக வேட்பாளரான சி.பி.எம். கட்சியின் அண்ணாதுரை, சுமார் 45,000 வாக்குகள் வித்தியாசத்திலும், திருப்பரங்குன்றம் தே.மு.தி.க. வேட்பாளர் ஏ.கே.டி.ராஜா சுமார் 48,000 வாக்குகள் வித்தியாசத்திலும் ஜெயித்து இருப்பது அழகிரிக்கு விடப்பட்ட சவால். யார் வேட்பாளர், எந்தச் சின்னத்தில் போட்டி இடுகிறார் என்றெல்லாம் பார்க்காமல், தி.மு.க. கூட்டணிக்கு எதிராக யார் நின்றாலும், அவர்களுக்குக் கண்ணை மூடிக்கொண்டு வாக்களித்து இருக்கிறார்கள் மதுரை மக்கள். கருணாநிதியே மதுரையில் நின்று இருந்தாலும் இதுதான் கதி!

அந்த அளவுக்கு நடந்தது, மௌனப் புரட்சி. மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த முறை அழகிரிக்கு 1.40 லட்சம் வாக்குகள் கூடுதலாகக் கிடைத்தன. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு 2.30 லட்சம் வாக்குகள் கூடுதல்!

மதுரைக்குள் தனது பெயர் கெட்டுக்கிடப்பது தெரிந்தோ என்னவோ மதுரைக்குள் அழகிரி ஓட்டு கேட்டுப் போகவே இல்லை. பணம் மட்டுமே கட்சியை ஜெயிக்கவைக்கும் என்று நம்பினார். ஆனால், ஓட்டுக்கு 200 ரூபாய் கொடுத்தது... வாக்காளர்களை வசவு பாட வைத்ததே தவிர, வாக்காக மாறவில்லை.

தன்னைச் சுற்றி இத்தனை வில்லங்கங்களை வைத்துக்கொண்டு, ''தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க. என்ற கட்சியே இருக்காது!'' என்று எந்த தைரியத்தில் சொன்னார் அழகிரி? உண்மையில் காணாமல்போனது அழகிரி தி.மு.க-தான்!

- குள.சண்முகசுந்தரம்

நடுக்கத்தில் "பிரசாரப் பீரங்கி' வடிவேலு

சென்னை: இந்தத் தேர்தலில் தி.மு.க.வின் பிரசாரப் பீரங்கியாகக் கருதப்பட்ட வடிவேலு அ.தி.மு.க. வெற்றி பெற்றதால் பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளார். அவரது வீட்டு முன் பெரும் பொலிஸ் படையே குவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க. கூட்டணிக்கு குறிப்பாக விஜயகாந்துக்கு எதிராக கடுமையான பிரசாரத்தை மேற்கொண்டார் வடிவேலு. விஜயகாந்த் கட்சி இந்தத் தேர்தலோடு காணாமல் போகும் என்றார். விஜயகாந்த் குடித்துவிட்டு உளறுவதாக கடுமையாகச் சாடினார். ஆனால் ஜெயலலிதாவை மட்டும் அவர் திட்டவில்லை. தேர்தல் முடிந்த பிறகும் வடிவேலுவின் வாய்த்துடுக்கு அடங்கவில்லை. அ.தி.மு.க.வுக்கு வாக்களித்த ரஜினியை சீண்டும் வகையில் பேட்டி கொடுத்தார். முடிவுக்குப் பிறகு எல்லாமே மாறும். அப்போது பேசிக் கொள்கி÷றன் என்று கூறினார். ராணா படத்தில் தன்னை நீக்கியதற்கு பதிலடியாக.

தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. அ.தி.மு.க. அபார பெரும்பான்மையுடன் ஆட்சியைப்பிடித்துள்ளது. வடிவேலுவால் விமர்சிக்கப்பட்ட விஜயகாந்தும் பெரும் வெற்றி பெற்றுள்ளார். அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் என்று கூறப்படும் அளவிற்கு அவரது நிலை உயர்ந்துள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே பகையாளிகளாக இருந்த வடிவேலுவுக்கும் விஜயகாந்துக்கும் மோதல் முற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வடிவேலுவை சினிமா உலகம் ஒதுக்க ஆரம்பித்துள்ள நிலையில், அவர் எதிர்த்துப் பிரசாரம் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்திருப்பதால் வடிவேலுவின் சினிமா வாழ்க்கையே அஸ்தமித்து விட்டதாக பலரும் பேசிக் கொள்கின்றனர்.

இன்னொரு பக்கம் வடிவேலு மீது விஜயகாந்த் ரசிகர்களும் சிங்கமுத்து ரசிகர்களும் கோபமாக உள்ளார்களாம். எனவே, அவரது வீட்டுக்கு முழு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விருகம்பாக்கத்தில் உள்ள வடிவேலு வீட்டைச் சுற்றிலும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அருகில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கும் பொலிஸ் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது. வீண் கலாட்டாவைத் தவிர்க்க வடிவேலுவை கொஞ்ச நாள் வெளியூரில் இருக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

நன்றி: தட்ஸ்தமிழ்

மக்களை திசை திருப்ப ஈழப் பிரச்சினையில் கருணாநிதி போட்ட 'டிராமா'-தயாநிதி மாறன் அம்பலம்!


சென்னை: ஈழத்தில் போரை நிறுத்தக் கோரி திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தது அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, மக்களை திசை திருப்புவதற்காக போட்ட நாடகம் என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல் கூறுகிறது.

Karunanidhi's Fast in Marina Beach

விக்கிலீக்ஸிடமிருந்து தி ஹிந்து நாளிதழ் பெற்ற தகவலை செய்தியாக வெளியிட்டுள்ளது. அதில் தமிழக மக்களை பல்வேறு பிரச்சினைகளிலிருந்து திசை திருப்புவதற்காக அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி பல்வேறு நாடகங்களை அரங்கேற்றியதாக அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் தயாநிதி மாறன் பேசுகையில், கூறியதாக பரபரப்புத் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

இதுதொடர்பாக தி ஹிந்து நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி:

2008ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு, அமெரிக்க துணைத் தூதர்ஆண்ட்ரூ சிம்கின் பெயரில் ஒரு கடிதம் போனது. அதில் தயாநிதி மாறனுடன், அமெரிக்க அதிகாரிகள் பேசிய விவரத்தை குறிப்பிட்டுள்ளார். அதில், தயாநிதி மாறன் மற்றும் காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோருடன் பேசியதை குறிப்பிட்டுள்ளார் சிம்கின்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தனது கட்சி மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்யப் போவதாக கருணாநிதி அறிவித்திருப்பது ஒரு நாடகம் என்று தயாநிதி மாறன் அப்போது தெரிவித்தார். மின் வெட்டுப் பிரச்சினை, அதனால் ஏற்பட்டுள்ள மக்களின் கடும் கோபம் ஆகியவற்றிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காகவே கருணாநிதி இவ்வாறு அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செயலுக்கும், தனக்கும் தொடர்பு இல்லை என்பதாக காட்டிக் கொள்ளும் நாடகமே இது. தானும் இதில் பங்கேற்று ராஜினாமா கடிதம் கொடுத்ததாகவும் அவர் கூறினார். இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை விட தமிழக மக்களை பல்வேறு பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பும் நோக்கமே கருணாநிதியிடம் இருந்தது.

மேலும் கருணாநிதி அரசு இதுவரை எந்த அரசு மீதும் இல்லாத அளவுக்கு மக்கள் மிகவும் கோபமாக இருப்பதாகவும் தயாநிதி மாறன் கூறினார்.

ஆனால் கருணாநிதி நடத்திய நாடகத்தால், திமுகவிடமிருந்து காங்கிரஸ் குறிப்பாக சோனியா காந்தி விலகத் தொடங்கினார். கருணாநிதியின் இந்த செயலுக்கு காங்கிரஸ் சரியான பதிலடியை பொருத்தமான நேரத்தில் கொடுக்கும். அது உறுதி.

பிரபாகரனைக் கொல்லத் துடித்த ராகுல் காந்தி

கருணாநிதியின் மகள் கனிமொழியை சமீபத்தில் சந்திக்க மறுத்தார் சோனியா. இதற்கு திமுக மீதான சோனியா காந்தியின் அதிருப்தி அதிகரித்ததே காரணம்.

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதற்குப் பழி வாங்க வேண்டும், பிரபாகரன் கொல்லப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் தீவிரமாக உறுதியாக உள்ளனர் என்றும் தயாநிதி மாறன் கூறியிருந்தார்.

திமுக தோற்கும்-தயாநிதி மாறன்

அதேபோல திமுக மீது ஊழல் கறை படிந்து விட்டது. இதை அகற்றாவிட்டால் திமுக பெரும் சரிவைச் சந்திக்கும் என்றும் அப்போது கூறியுள்ளார் தயாநிதி மாறன்.

இதன் மூலம் சட்டசபைத் தேர்தலில் திமுகவின் தோல்வியை அன்றே கணித்துள்ளார் தயாநிதி மாறன் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்.கைவிட்டால் திமுகவுக்கு வழியில்லை-பீட்டர்

பீ்ட்டர் அல்போன்ஸ் கூறுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து தனது எம்.பிக்களை வாபஸ் பெற மாட்டார் கருணாநிதி என்று உறுதிபடக் கூறியிருந்தார். தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக, தான் வலுவாக இருப்பதாக காட்டிக் கொள்ளவே இவ்வாறு அறிவித்தார் (எம்.பிக்கள் ராஜினாமா செய்வதாக) கருணாநிதி. மற்றபடி, அனைத்துக் கட்சிக் கூட்டம், தீர்மானம் என்பதெல்லாம் சப்பைக் கட்டுதான்.

காங்கிரஸுடனும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியுடனும் இணைந்து இருப்பது ஒன்றுதான் திமுகவுக்கு உள்ள ஒரே வழி என்று கூறியிருந்தார் பீட்டர்.

ஆனால் தாங்கள் ராஜினாமா செய்யப் போவதாக திமுக கூறியது காங்கிரஸ் மேலிடத்தை கடும் எரிச்சலுக்குள்ளாக்கியது உண்மை. மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பாதையில் திமுக திரும்புகிறதோ என்று காங்கிரஸ் கருதியது என்று கூறியுள்ளார் பீட்டர்.

'திமுக, காங்கிரஸின் சுய நல உறவு'

இந்த இருவரின் பேச்சுக்களையும் வைத்துப் பார்க்கும்போது இரு கட்சிகளுமே ஒரு சுயநலத்தோடுதான் உறவு வைத்துள்ளன என்பது தெரிய வருகிறது. முதல்வர் பதவியில் நீடிக்க காங்கிரஸின் தயவு கருணாநிதிக்குத் தேவை. அதேபோல ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு டெல்லியில் நீடிக்க கருணாநிதியின் தயவு காங்கிரஸுக்குத் தேவை.

இதன் விளைவாகவே இந்த அரசியல் நாடகத்தை கருணாநிதி அரங்கேற்றியிருப்பதாக தெரிகிறது.

கருணாநிதியின் முகத்தைக் காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸ் போதிய அவகாசம் கொடுத்ததால் தனது நாடகங்களை முடித்துக் கொண்டார் கருணாநிதி என்று அந்த கேபிளில் சிம்கின் தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் தெரிவிக்கிறது.

ஈழப் பிரச்சினையை வைத்து கருணாநிதி நாடகமாடினார் என்று தயாநிதி மாறனே அமெரிக்க அதிகாரிகளிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Thanks to 
Thatstamil

Saturday, May 14, 2011

ஜனநாயகத்தைக் காக்க வாருங்கள்



ஜனநாயகத்தைக் காப்பதற்கும் பதிவுலகத்துக்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கிறீர்களா ? இருக்கிறது.





தமிழ்நாட்டில் இன்று நான்காவது தூண் என்று அழைக்கப் படும் பத்திரிக்கை உலகம் எந்த நிலையில் இருக்கிறது என்று தெரியுமா ?









சவுக்குக்கு கிடைத்துள்ள பிரத்யேக தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. 2006ம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழக பத்திரிக்கை உலகில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.







பத்திரிக்கைகளின் கருத்துக்களை மிகுந்த கவனத்தோடு பரிசீலித்தும், தன்னையே ஒரு பத்திரிக்கையாளர் என்று அழைத்துக் கொள்ளும் கருணாநிதி, ஏறக்குறைய அனைத்து பத்திரிக்கைகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





தமிழ் நாட்டில் வெளிரும் ஆங்கில பத்திரிக்கைகள் நான்கு. தி ஹிந்து, டெக்கான் க்ரானிக்கிள், டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்.





இந்த பத்திரிக்கைகளில் தி ஹிந்து, முரசொலியின் ஆங்கிலப் பதிப்பாக மாறி, பல ஆண்டுகள் ஆகின்றன.







இதற்கு குறிப்பான காரணம், 2003ம் ஆண்டில் ஹிந்து நாளிதழ் எழுதிய தலையங்கம், தமிழக சட்டசபையின் உரிமை மீறியதாக ஆணையிட்டு, அப்போதைய சபாநாயகர் காளிமுத்து, ஹிந்து நாளேட்டின் ஆசிரியர் மற்றும் உரிமையாளர் மற்றும், அந்த தலையங்கத்தை மொழி பெயர்த்து வெளியிட்ட முரசொலியின் நிர்வாகிகளையும் கைது செய்ய உத்தரவிட்டார்.





இதையொட்டி, அப்போது ஜெயலலிதாவுக்கு மிகுந்த விசுவாசமாக இருந்த காவல்துறை, உடனடியாக ராம், முரளி உள்ளிட்ட ஹிந்து நிர்வாகிகளை கைது செய்ய முனைந்தது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, முன் பிணை பெற்றவுடன், அந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்தது. இந்த சம்பவத்தின் பின்னணியில், ஜெயலலிதா மீது கடும் கோபம் கொண்ட ஹிந்து குழுமம், அந்நாள் முதல், ஹிந்து பத்திரிக்கை, பத்திரிக்கை தர்மத்தை மறந்து, கருணாநிதியின் ஊதுகுழல்களில் ஒன்றாக ஆனது.



இந்நாளேடு, ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி எவ்வாறு செய்தி வெளியிட்டது என்பதும், இதற்காக, ஹிந்து ராமுக்கு இலங்கை அரசு லங்கா ரத்னா விருது வழங்கி கவுரவித்ததும் வரலாறு.







அடுத்து டெக்கான் க்ரானிக்கிள் நாளேடு. இந்நாளேடு, ஓரளவுக்கு நியாயமாக, பொதுமக்களின் பிரச்சினைகளையும், அரசின் தவறுகளையும் சுட்டிக்காட்டும் பத்திரிக்கையாகத்தான் இருந்து வந்தது. 2008 ஏப்ரல் 14 அன்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டின் சென்னை பதிப்பு வெளிவந்தது. இந்நாளில், டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டை விட வியாபார ரீதியில் பிரபலமாக வேண்டும் என்ற உந்துதலில், முன்னாள் தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி,ஐஏஎஸ் மற்றும் முன்னாள் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் எஸ்.கே.உபாத்யாய் ஆகிய இருவருக்கிடையே நடைபெற்ற உரையாடலை வெளியிட்டது.







இந்த உரையாடல் வெளியாகி, சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் பரபரப்பை ஒட்டி, டெக்கான் க்ரானிக்கிள் நாளேட்டின் சர்குலேஷன் பன்மடங்கு கூடியது. ஆனால், அந்த புகழுக்கு இந்த நாளேடு அளித்த விலை மிக அதிகம்.



முதலில், இந்நாளேட்டின் அலுவலகத்தை காவல்துறையை விட்டு சோதனை செய்து, எடிட்டரை கைது செய்யத் உத்தேசித்திருந்த கருணாநிதி, பத்திரிக்கைகளின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்று சமயோசிதமாக யோசித்து, டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழுக்கு அரசு விளம்பரங்களை நிறுத்தினார். அரசு விளம்பரத்தை நிறுத்தினால், ஒரு செய்தித் தாள், தள்ளாடி தடுமாறும் என்பதை அறிந்த கருணாநிதி இவ்வாறு செய்தார். அதைப் போலவே, அந்நாளேடு தள்ளாடத் தொடங்கியது. விளம்பரத்தை நிறுத்தினால், ஒரு நாளுக்கு ஒரு செய்தித் தாளுக்கு ஏற்படும் நஷ்டம் என்ன தெரியுமா ?



டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழின் விளம்பரப் பலகை




குறைந்தது ரூபாய் 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை. ஒரு நாளைக்கு 5 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுவதை உலகத்தில் எந்த முதலாளி பொறுத்துக் கொள்வான் ? உலகில் உள்ள அத்தனை முதலாளிகளின் நோக்கமும் மூன்று விஷயங்கள் மட்டும் தான்.



1) லாபம்

2) லாபம்

3) லாபம்



இந்த லாபத்துக்காகத்தான் முதலாளிகள் தொழிலில் இறங்குகிறார்கள். அந்த லாபம் அடிபடத் தொடங்கினால் ? அரசின் காலில் முதலாளி மண்டியிடுவான். அதுதான் டெக்கான் க்ரானிக்கிள் நாளேட்டின் கதையிலும் நடந்தது. உபாத்யாய் திரிபாதி தொலைபேசி உரையாடலை வெளியிட்ட டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழின் மூத்த நிருபர் வி.பி.ரகு, அநேகமாக வேலையை விட்டு டிஸ்மிஸ் ஆகும் நிலைக்கு தள்ளப் பட்டார்.



டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழின் விளம்பரப் பலகை


பிறகு, அரசோடு சமாதானம் ஆனபின் அரசுக்கு எதிராக செய்திகள் வருவது, ஏறக்குறைய நிறுத்தப் படும் என்ற உடன்பாட்டுக்குப் பிறகு, டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழுக்கு மீண்டும் அரசு விளம்பரங்கள் வழங்கப் பட்டன.



உடன்பாட்டுக்கு ஏற்ப, டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழும், அரசை வெகுவாகச் சாடாமல் இப்படியும் இல்லாமல், அப்படியும் இல்லாமல் தனது லாபத்துக்கு குறைவு ஏற்படாமல் இன்று செயல்பட்டுக் கொண்டு வருகிறது.



அடுத்து டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ். இந்த நாளிதழ், எப்பொழுதுமே முதலாளிகள் மற்றும் முதலாளி வர்க்க சார்போடுதான் இருந்து வந்திருக்கிறது.







ஒரு பத்து பேர், உணவில்லாமல் பட்டினியால் சாக நேரிடும் ஒரு செய்தியையும், இந்திய அரசின் பொருளாதார கொள்கையால், பெரும் நிறுவனங்களுக்கு லாபத்தில் குறைவு ஏற்படும் ஒரு செய்தியையும் ஒப்பிட்டால், லாபத்தில் ஏற்படும், குறைபாட்டைத் தான் இந்நாளேடு பெரிதாக வெளியிடும்.



இது போல, தன்னுடைய முதலாளித்துவச் சார்பை சமன் செய்வதற்காக அவ்வப்பொழுது இங்கும் அங்கும் ஒரு ஏழையின் கஷ்டத்தை பற்றிச் செய்தி வெளியிட்டு நடுநிலையான நாளேடு போல காட்டிக் கொள்ளும். இந்நாளேட்டின் உரிமையாளர், இந்தியாவின் முதல் பத்து பணக்காரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது.



இந்நிறுவனத்தின் இந்தியா டைம்ஸ் இணையத் தளம், டைம்ஸ் நவ் தொலைக்காட்சி அனைத்திலும், இந்த முதலாளித்துவச் சார்பை காணலாம். இந்தியா டைம்ஸ் இணைய தளத்தில் அதிகம் பேர் விரும்பிப் பார்க்கும், கவர்ச்சிப் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப் பட்டு வருவது குறிப்பிடத் தக்கது.



எஞ்சியுள்ளது, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு மட்டுமே. இந்நாளேடாவது நடுநிலையாக இருக்குமென்றால் இல்லை.







எதிர்க்கட்சித் தலைவர் செல்வி ஜெயலலிதாவை விமர்சித்து வரும் செய்திகளை பூதக்கண்ணாடி வைத்தாலும் காண முடியாது. சரி, ஆளுங்கட்சியை எதிர்ப்பதுதான், உண்மையான பத்திரிக்கை தர்மம் என்று வைத்துக் கொண்டாலும் கூட, சமீப காலமாக, இப்பத்திரிக்கையில், அரசுக்கு எதிராக வரும் செய்திகள் குறைந்த வண்ணம் உள்ளன.



பத்திரிக்கை உலகில் விபரம் அறிந்தவர்கள், எக்ஸ்பிரஸ் குழுமத்தின் முதலாளி, கருணாநிதியை வெகு சமீபத்தில் சந்தித்ததாகவும், அச்சந்திப்பின் போது, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் கருணாநிதி குடும்பத்தையும், கருணாநிதியையும், விமரிசித்து, தலையங்கப் பகுதிக்கு அருகில் வரும் கட்டுரைகள் மிகக் கடுமையாக இருப்பதாகவும், கருணாநிதி அங்கலாய்த்ததாக கூறப் படுகிறது.



இந்த அங்கலாய்ப்பின் விளைவாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் அரசுக்கு எதிரான செய்திகளை குறைத்துக் கொள்ள எக்ஸ்பிரஸ் குழுமம் முடிவெடுத்திருப்பதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.



தமிழ்நாட்டில் உள்ள நான்கு ஆங்கிலப் பத்திரிக்கைகளும் கருணாநிதியின் பிடியில் வந்து விட்டதல்லவா ? அடுத்து தமிழ் தினசரிகளைப் பார்ப்போம்.







தினமணி நாளேட்டின் தலையங்கங்கள் கடுமையான விமர்சனத்தை தாங்கி வந்தன. கருணாநிதி அரசின் அயோக்கியத்தனங்களை தினமணி தொடர்ந்து சாடியே வந்துள்ளது.



இவ்வாறு கடும் விமர்சனங்களை அடக்கிய தலையங்கம் வந்தபோதெல்லாம் அந்நாளேட்டின் ஆசிரியரை, பார்ப்பனர் என்றும், காதில் கேட்கக் கூசும் வார்த்தைகளால், காலை 6 மணி முதல் 8 மணி வரை கருணாநிதி அர்ச்சனை செய்வதுண்டு என்று, இந்த அர்ச்சனைகளை காதில் கேட்டவர்கள் கூறுகிறார்கள்.



இப்படியெல்லாம் அர்ச்சனை செய்தாலும், கருணாநிதியை பாராட்டி வரும் செய்திகளை “தினமணி நாளேடே கூறியுள்ளது“ என்று அதை எடுத்து முரசொலியில் பெரிய செய்தியாக வெளியிட கருணாநிதி தயங்கும் அளவுக்கு அவருக்கு சுயமரியாதை இல்லை.







பச்சை நிறத்தில் இல்லையே ஒழிய, கருணாநிதிக்கு பச்சோந்திக்கு உண்டான அத்தனை குணநலன்களும் உண்டு. கடந்த ஆண்டு கருணாநிதி பிறந்தநாளின் போது அவரை வாழ்த்தி தினமணி எழுதிய தலையங்கத்தை, கருணாநிதி விழா மேடையில் ஒரு வரி விடாமல் படித்தது குறிப்பிடத் தகுந்தது.



தலையங்கங்களைத் தவிர, தினமணியில் மிக முக்கியமாக குறிப்பிட வேண்டிய விஷயம், நடுப்பக்கத்தில் வரும் கட்டுரைகள்.



பழ.கருப்பையா


கட்டுரையாசிரியர் பழ.கருப்பையாவைத் தவிர அக்கட்டுரைகளில் கருணாநிதியை கடுமையாக விமரிசனம் செய்வது அரிதிலும் அரிதான விஷயம். எக்ஸ்பிரஸ் குழுமத்திற்கும் அரசிற்கும் ஏற்பட்ட உடன் பாட்டின் விளைவுகள், அக்குழுமத்திலேயே இருக்கும் தினமணியை மட்டும் பாதிக்காதா என்ன ?



அதன் விளைவு, சமீப காலமாக பழ.கருப்பையா காணாமல் போய் விட்டார். நேற்று எழுதிய கட்டுரையில் கூட, ஏசு பிரானைப் பற்றித் தான் பழ.கருப்பையா எழுதியிருக்கிறார். தினமணியின் தலையங்கங்கள் கூட, தமிழக அரசை தொடாமல், இந்தியாவின் மற்ற மாநிலங்களைச் சுற்றி வருகின்றன.



கருணாநிதிக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்த தினமணியை ஒரு வழியாக சரிக்கட்டியாகி விட்டது.



அடுத்து கருணாநிதியை தொடர்ந்து விமர்சித்து, தொல்லை கொடுத்து வந்த ஒரு நாளிதழ் தினமலர்.



முதலில், தினமலர் குழுமத்தில் ஏற்பட்ட குடும்பச் சண்டையை தனது உளவுத் துறை மூலம் பெரிதாக்கி அந்நெருப்பில் குளிர் காய்ந்தார் கருணாநிதி.







அதற்குப் பிறகும் சென்னை தினமலரின் விமர்சனங்கள் குறையாததால், சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார் பனங்காட்டு நரியான கருணாநிதி. அருமையான சந்தர்ப்பத்தை தினமலர் நாளேடே ஏற்படுத்திக் கொடுத்தது.



ஊரில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் பற்றி எழுதிக் கிழித்து விட்டது போல, தமிழ் திரைப்படங்களின் முன்னாள் கதாநாயகிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்று, சில முன்னாள் முன்னணி நடிகைகளின் புகைப்படத்தோடு செய்தி வெளியிட்டது தினமலர்.





சர்ச்சைக்குரிய தினமலர் செய்தி


உண்மையிலேயே அந்நடிகைகள் பாலியல் தொழில் செய்தார்கள் என்று வைத்துக் கொண்டால் கூட, அதனால் யாருடைய சோற்றில் மண் விழுந்தது ? ஆனால், இதை ஒரு மிகப் பெரிய சமுதாய பிரச்சினையாக்கி பெரிய அளவில் செய்தி வெளியிட்டிருந்தது தினமலர்.



நடிகர் சங்கத்தின் போராட்ட அறிவிப்பு




“மயிர் நீக்கின் உயிர் வாழா கவரிமான்“ குடும்பத்தைச் சேர்ந்தவர்களான திரைத் துறையினர் மிகப்பெரிய கூத்தை போராட்டம் என்ற பெயரில் நடத்தினார்கள்.



அவ்வளவுதான் கருணாநிதிக்கு வந்ததே கோபம் !



தமிழகத்தின் அத்தனை பிரச்சினைகளும் தீர்ந்து விட்டது போலவும், இனி தீர்க்க வேறு பிரச்சினைகளே இல்லை என்பது போலவும், உடனடியாக “பெண்களுக்கெதிரான வன்கொடுமை சட்டத்தின்“ கீழ் காவல்துறையை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.



இங்கேதான் இருக்கிறது கருணாநிதியின் தந்திரம்.



சட்டத்தின் படி, அவதூறான செய்தி வெளியிடும் பத்திரிக்கையின் ஆசிரியரும், பதிப்பாளரும் (முதலாளி) தான் வழக்கமாக கைது செய்யப் படுவார்கள்.



ஆனால், தினமலர் முதலாளிகளோடு, ஒரு “கள்ள ஒப்பந்தத்தை“ கருணாநிதி செய்து கொண்டு அந்நாளேட்டின் செய்தி ஆசிரியர் லெனினை காவல்துறையை வைத்து கைது செய்தார் கருணாநிதி.



தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் கைது செய்யப் படுகையில்


தினமலர் நிர்வாகமும், சந்தோஷமாக லெனினை காவல்துறையோடு அனுப்பி வைத்தது.



பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டும் கைதேர்ந்த கபட வேடதாரி கருணாநிதி, லெனின் கைதால் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் ஏற்பட்ட எதிர்ப்பை சமாளிக்க, லெனின் பிணை மனுவுக்கு நீதிமன்றத்தில் அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க உத்தரவிட்டார்.



மறுநாளே லெனின் சிறையிலிருந்து வெளியே வந்தார். முதலாளியை கைது செய்யாமல் செய்தி ஆசிரியரை கைது செய்ததற்கு நன்றியாக தினமலர், இன்று தனது அரசு எதிர்ப்பு செய்திகளை ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு மற்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.



வழக்கமாக, காரசாரமாக, அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தினரைப் பற்றிய செய்திகளை தாங்கி வரும் தினமலரின் “டீக்கடை பென்ச்“ பகுதி கூட, உப்புச் சப்பில்லாமல் வருகிறது.



தமிழகத்தின் மிகப் பெரிய நாளிதழான தினத்தந்தியைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.





20 பேர் இறந்த விபத்துச் செய்தியை சின்னதாக போட்டு விட்டு, நடிகையின் உள்பாவாடை காணாமல் போன செய்தியை தலைப்புச் செய்தியாக போடும் நாளிதழ்.



இதற்கு, மக்கள் நடிகையின் உள்பாவாடை பற்றித் தான் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள் என்ற வியாக்கியானம் வேறு.



எப்போதும் தினத்தந்தி ஒரு கட்சி சார்பாகவே இருந்து வந்திருக்கிறது. அதிசயிக்காதீர்கள். அந்த ஒரு கட்சி வேறு எந்தக் கட்சியும் அல்ல. “ஆளும் கட்சி“தான் அது.



அடுத்து எஞ்சியிருப்பது, தினகரன் தான். குடும்பம் பிரிந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது, தினகரன் நிருபர்கள் அரசுக்கு எதிரான செய்திகளுக்காக ஆலாய்ப் பறப்பார்கள்.







குடும்பம் ஒன்று சேர்ந்ததும், அரசுக்கெதிரான செய்திகள் அடியில் போடப்பட்டு, கருணாநிதியின் அறிக்கைகளும், பாராட்டுகளும் முதல் பக்கத்தில் வருகின்றன.



இதில் ஜெயலலிதாவின் அறிக்கைகளை சின்னதாக வெளியிட்டு நடுநிலையாக இருப்பதாக வேறு காட்டிக் கொள்கிறார்கள். குடும்பம் சண்டையில் இருந்த காலத்தில், தினகரன் நாளேடு, அரசு விளம்பரம் வருவதில்லை என்று, நீதிமன்றம் சென்றதை நினைவில் கொள்ள வேண்டும்.



எவ்வளவுதான் பணம் கொட்டிக் கிடந்தாலும், சன் டிவி குழுமத்தின் வருமானம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டினாலும், விளம்பர வருமானம் குறைந்தவுடன் நீதிமன்றம் செல்லும் பத்திரிக்கை முதலாளிகளின் கவலையை கவனத்தில் கொள்ள வேண்டும்.



பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் தமிழ் ஓசை நாளேட்டை, டாக்டர் ராமதாஸ், ஜி.கே.மணி தவிர ஒருவரும் படிப்பதில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. அன்புமணி ராமதாஸ் கூட ஹிந்து தான் படிக்கிறாராம்.



இதைத் தவிர சொல்லிக் கொள்ளும் படி ஒரு நாளிதழும் இல்லை.



வாரம் இருமுறை இதழ்களை எடுத்துக் கொண்டால், நக்கீரனை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.







ஜெயலலிதா அரசாங்கத்தில் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டதால், நக்கீரன் பத்திரிக்கையில் ஆசிரியர் நக்கீரன் கோபால் மற்றும் மூத்த பத்திரிக்கையாளர்களுக்கு ஜெயலலிதா மீது ஏற்பட்ட வெறுப்பு ஜெயலலிதாவை ஹிட்லர், முசோலினி போன்ற ஒரு கொடுங்கோலர் போலவும், கருணாநிதியை ஏசு பிரான் போலவும் எண்ண வைத்தது.



இதன் விளைவு, நக்கீரன் அறிவாலயத்தில் அச்சடிக்கப் படுவது போலவே செய்திகளைத் தாங்கி வருகிறது. மேலும், இப்பத்திரிக்கை, உளவுத் துறையின் ஒரு மூத்த அதிகாரியின் பிடியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.



மேலும், இப்பத்திரிக்கையின் இணை ஆசிரியராக இருக்கும் காமராஜ், கருணாநிதிக்கு மிக மிக நெருக்கமாக உள்ளதால், கருணாநிதியின் எண்ணங்களே நக்கீரனில் செய்தியாக வருவதாக கூறப்படுகிறது.



ஈழப் போரின் போது ஈழச் செய்திகளை வெளியிட்டு கொள்ளை லாபம் பார்த்த நக்கீரன், தற்போழுது, ஈழப் போரை வழிநடத்தியவர் போலவும், பிரபாகரனுக்கே போர் முறைகளை கற்றுக் கொடுத்தவர் போலவும் பேசி வரும், போலிச் சாமியார் ஜெகத் கஸ்பர் எழுதும் தொடரை வெளியிட்டு வருகையிலேயே நக்கீரனின் அருமை புரியும்.



அடுத்து ஜுனியர் விகடன். மக்கள் மத்தியில் ஒரு நற்பெயரை பெற்றிருந்த இந்த இதழ், காவல்துறை அதிகாரிகளின் பிடியில் சிக்கி, நடுநிலையான பத்திரிக்கை என்ற பெயரை ஏறக்குறைய இழந்து நிற்கிறது.







குறிப்பாக, காவல்துறை அதிகாரிகளின் ஊழல்களை தைரியமாக அம்பலப்படுத்தி வந்த இந்த இதழ், தற்போது, காவல்துறை அதிகாரிகளின் புகழ் பாடும் பத்திரிக்கையாக உருமாற்றம் பெற்றுள்ளது.



மேலும், விகடன் குழுமம் திரைப்படத் தயாரிப்பில் இறங்கத் தொடங்கியதும், பத்திரிக்கையை விட, திரைப்படத்தில் இக்குழுமத்தின் முதலாளிகள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சினிமா என்ற மாய உலகம் காட்டிய கவர்ச்சியில் இக்குழுமத்தின் மேல்மட்ட நிர்வாகிகள் மயங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



சில ஆண்டுகளாக செக்ஸ் கதைகளை வெளியிடாமல் இருந்த ஜுனியர் விகடன், சமீப காலமாக செக்ஸ் கதைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஜுனியர் விகடன் புண்ணியத்தில், காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதனின் நீலப்படம் இல்லாத செல்போனே தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.





இலங்கை சென்று, ராஜபக்ஷேவுடன் கைகுலுக்கி, சிரித்துப் பேசி, விருந்துண்டு, பரிசுகள் அளித்து, பெற்று, இந்தியா திரும்பியுள்ள திருமாவளவனை வைத்து “முள்வலி“ என்ற தலைப்பில் கம்பி வேலிக்குள் அடைபட்டுக் கிடக்கும் ஈழத் தமிழர்களை பற்றி எழுத வைத்து, ஈழத் தமிழருக்காக இன்னும் மிச்சம் உள்ள இரக்கத்தை வியாபாரம் செய்து லாபம் பார்த்து வருகிறது இந்த இதழ்.



கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது “வேட்பாளர் தம்பட்டம்“ என்ற தலைப்பில் விளம்பரங்கள் வெளியிட்டு, ஜுனியர் விகடன் கொள்ளை லாபம் பார்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு பக்க விளம்பரத்துக்காக, இரண்டு லட்சம் என்று விலை பேசி, மார்க்கெடிங் செய்ய அனைத்து அரசியல் கட்சிகளிடமும், வேட்பாளர்களிடமும், ஜுனியர் விகடன் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



அடுத்த வாரம் இருமுறை இதழ், “குமுதம் ரிப்போர்ட்டர்“. இந்த பத்திரிக்கை அரசு, அரசியல் செய்திகள் என்றெல்லாம் ரொம்பவும் மெனக்கிடுவதில்லை.





எல்லா பத்திரிக்கைகளின் குறிக்கோளும் லாபம் என்றாலும், குமுதம் ரிப்போர்ட்டரின் குறிக்கோள், எப்படியாவது லாபம் என்பதுதான். இப்பத்திரிக்கை எப்போதும் கையாளும் ஒரு முக்கிய தந்திரம் “செக்ஸ்“.



செக்ஸ் தொடர்பாக எந்த செய்தி இருந்தாலும் அதை அட்டையில் போட்டு, அந்த இதழுக்கு கூடுதலாக 4 அல்லது 5 லட்ச ரூபாய் லாபம் பார்ப்பதுதான் இந்த இதழுக்கு வழக்கம்.



“பள்ளி மாணவிகளிடம் உலவும் செக்ஸ் வீடியோ“, “டேட்டிங் செய்யும் இளசுகள் – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்“, “பெருகி வரும் கள்ள உறவுகள்“ “செக்ஸ் வீடியோவில் மாட்டிய எம்.எல்.ஏ“ செக்ஸ் படம் காட்டும் இணையத் தளங்கள்“ “மீண்டும் சரோஜாதேவி கதைகள் ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்” என்ற ரீதியில் தான் இந்த இதழின் தலைப்புச் செய்திகள் இருக்கும்.



ஒரு வாரத்துக்கு செக்ஸ் செய்தி கிடைக்க வில்லை என்றால் “நான் ஸ்டாலினுக்கு போட்டியா ? அழகிரி அதிர்ச்சிப் பேட்டி“ அல்லது “நான் யாருக்கும் இளைத்தவன் இல்லை – விஜயகாந்த் உற்சாகப் பேட்டி“ என்று இதழை ஓட்டி விடுவார்கள்.



இது தவிர, இந்நிறுவனத்தின் முதலாளியின் 1500 ஏக்கர் நிலம் சென்னையை அடுத்து இருப்பதாகவும், இந்நிலத்தை, காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் மேற்பார்வை செய்து பிரச்சினைகள் ஏதும் வராமல் பார்த்துக் கொள்வதாகவும், இதனால், அந்த அதிகாரி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் குறித்த செய்திகள் எதுவும் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வருவதில்லை என்றும் கூறப்படுகிறது.



இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்து வரும் வார இதழ் “தமிழன் எக்ஸ்பிரஸ்“. இந்த இதழை டீக்கடையில் போண்டா மடிப்பதற்குக் கூட பயன் படுத்துவதில்லை என்று கூறப் படுகிறது.







வருமான வரியில் நஷ்டம் காட்டுவதற்காகத்தான் இந்த இதழை எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



எஞ்சியுள்ளது, வெளிவந்து ஒரு வருடம் ஆன “தமிழக அரசியல்“ வார இதழ். அரசுக்கு எதிரான செய்திகள் ஓரளவுக்கு வந்தாலும் விருப்பு வெறுப்பின்றி நடுநிலையோடு இந்த இதழ் செயல்படுகிறதா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.







இந்த இதழில் வெளிவரும் செய்திகள் அரசின் மீது விமரிசனம் செய்யும் தொனியில் இருந்தாலும் துணை முதல்வருக்கு, ஏறக்குறைய சாமரம் வீசும் வகையில் தான் இருக்கிறது. சமீபத்தில் ஸ்டாலின் பற்றி வெளிவந்த ஒரு கட்டுரையில், ஸ்டாலினுக்கு பக்குவம் போதாது என்று குறிப்பிடப் பட்டிருந்தது.



எதற்காக என்றால், ஒரு அதிகாரி ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் ஊழல் இருந்தது என்று குறிப்பிட்டாராம். உடனடியாக ஸ்டாலின் விசாரணைக்கு உத்தரவிட்டாராம். உடனடியாக இன்னொரு அதிகாரி பதறிப்போய், இந்த விஷயத்துக்கு ஒப்புதல் கொடுத்தது முதல்வர் கருணாநிதிதான், விசாரணை நடந்தால் அது அரசின் மீதே திரும்பும் என்பதால் விசாரணை வேண்டாம் என்று கூறினாராம்.



இது போல, ஒரு ஊழல் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டதால் ஸ்டாலினுக்கு பக்குவம் இல்லை என்று குறிப்பிடப் பட்டிருந்தது. ஊழல்களை மூடி மறைக்க ஸ்டாலின் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை என்றுதானே பொருள் ? ஒரு வேளை எப்படியும் அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான்.



இப்போதே ஸ்டாலினுக்கு ஜால்ரா போட ஆரம்பித்து நாளை ஸ்டாலின் முதல்வரானால், நாங்கள்தான் உங்களை முதல்வர் ஆக்க உத்தரவிட்டோம், அதனால் வாரம் 20 பக்கத்துக்கு அரசு விளம்பரம் தாருங்கள் என்று கேட்கலாமென, தமிழக அரசியல் நிர்வாகம் திட்டமிட்டுருக்கிறதோ என்ற சந்தேகம் இருக்கிறது.



இது போகவும், தமிழக அரசியல் நிர்வாகமும், தமிழக அரசியல் தவிர, திரிசக்தி என்ற ஆன்மீக பத்திரிக்கை, திரைப்படத் தயாரிப்பு என்று பல தொழில்கள் செய்து வருவதால் தமிழக அரசியல் பத்திரிக்கையை சீரியசாக நடத்துவது போலத் தெரியவில்லை.



முக்கிய அரசியல் பத்திரிக்கைகள் அனைத்தையும் பார்த்தாயிற்று. மற்ற வார, மாத இதழ்களுக்கு, அரசியல் ஒரு சிறு பகுதிதான் என்பதால், கருணாநிதி இவைகளை கண்டு கொள்வதில்லை.



தொலைக்காட்சி ஊடகங்கள் என்ன நிலையில் இருக்கின்றன என்பதை விளக்கத் தேவையில்லை. தொலைக்காட்சியில் வரும் செய்திகளையும் மக்கள் அப்படியே உண்மை என்று நம்பும் காலம் மலையேறி விட்டது. பின்னே, விஜயின் வேட்டைக்காரன் படத்துக்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது என்று சன் நியூஸில் அரை மணிக்கொரு முறை சொன்னால், மக்கள் சிரிக்க மாட்டார்கள் ?



பெரும்பாலான தொலைக்காட்சிகள் அரசியல் கட்சிகளின் பின்னணியில் இயங்குவதால், அவற்றில் உண்மை செய்திகளை காண்பது கடினமாக இருக்கிறது.



இந்நிலையில், ஒரு ஜனநாயகத்துக்கு, சுதந்திரமான பத்திரிக்கைகள் எவ்வளவு முக்கியம் என்பதை அனைவரும் அறிவோம். சுதந்திரமான பத்திரிக்கைகள் இல்லையென்றால், ஹிட்லரின் தளபதி, கோயபல்ஸ் பத்து முறை ஒரு பொய்யைச் சொன்னால் அது உண்மையாகி விடும் என்று கூறியது, இப்பொழுது இருக்கும் பத்திரிக்கைளால் நடைமுறைக்கு வந்து விடும்.



சரி. ஆட்சி சிறப்பாக நடக்கிறது. விமர்சனங்களே அவசியம் இல்லை என்றால் அதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.



சிறப்பாக நடக்கும் ஆட்சி கூட, தவறுகள் இழைக்கக் கூடும். அந்தத் தவறுகளை சுட்டிக் காட்டி, அந்த ஆட்சியை மேலும் சிறப்பாக நடத்த பத்திரிக்கைகள் அவசியம்.



அப்படிப்பட்ட சுதந்திரமான பத்திரிக்கைகள் இல்லாது போனால் வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற நிலை உருவாகும். ஜனநாயகம் என்பது, தானாக வாடி, வதங்கி, உதிர்ந்து விடும்.



தமிழ்நாட்டில், பத்திரிக்கைகள் ஏற்படுத்தியுள்ள இந்த வெற்றிடத்தை இட்டு நிரப்பும் திறன், பதிவர்களுக்கு மட்டுமே உள்ளது. இந்த பதிவுலகம் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. இங்கே எழுத்துச் சுதந்திரம் உண்டு.



நியாயமாக எழுதினால், நம்மை வேலையை விட்டு அனுப்பி விடும் முதலாளியும் இல்லை, அரசுக்கு எதிராக எழுதினால், விளம்பரம் வராதே என்று கவலைப்படும் வியாபார நெருக்கடியும் இல்லை.



நமது பதிவுலகத்தில் பெரும்பாலான பதிவுகள் செய்தித் தாள்களில் வருபவற்றை மறு பதிவு செய்பவையாகவும், சினிமா செய்திகளை பெரிது படுத்துவதாகவும் உள்ளன.



இப்பதிவுலகத்தை, இந்த அரசில் ஏற்பட்டு வரும் ஊழல்களை வெளிக் கொணர சுதந்திரமான ஒரு தளமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.



அரசு இயந்திரத்தின் முக்கிய பகுதியாக இருக்கும் அரசு ஊழியர்களே !. அரசுத் துறைகளில் நடக்கும் ஊழலில், புறங்கையை நக்காமல், ஊழலை எதிர்க்க திராணியும் இல்லாமல் வெளியே சொல்ல இயலாமல் புழுங்கிக் கொண்டிருக்கும் போராளிகளே.



உங்களுக்குத் தெரிந்த ஊழல்களை, இந்த பதிவுலகத்தில் வெளியிடுங்கள்.

முக்கிய செய்திகளை ஆசிரியருக்கு அனுப்பி, அது பிரசுரமாகாததால் மனம் புழுங்கும் பத்திரிக்கையாளர்களே. பதிவுலகிற்கு வாருங்கள்.



பதிவர்களே சீரியசான பதிவுகளை எழுதுங்கள். மக்கள் பிரச்சினைகளை எழுதுங்கள். இந்தப் பத்திரிக்கைகள் செய்யத் தவறுவதை நாம் செய்வோம்.



இது அற்புதமான உலகம். நமது ஜனநாயகத்தை, நமது குழந்தைகளுக்கு பத்திரமாக விட்டுச் செல்லும் பொறுப்பு நமக்கு உண்டு. அந்தப் பொறுப்பை தவற விட்டால், நம் கண் முன்னே, இந்த ஜனநாயகம் செத்து மடிவதை காணும் கொடுமைக்கு ஆளாவோம்.



ஜனநாயகத்தை பதிவுலகத்தால் மட்டுமே காப்பாற்ற இயலும். வாருங்கள் தோழர்களே!

சவுக்கு

Thursday, May 12, 2011

கனி Returns


Thu, May 12, 2011 1:09:09 AM
சென்னை திரும்பினார் கனிமொழி
PDFஅச்சிடுகமின்-அஞ்சல்
புதன்கிழமை, 11 மே 2011 23:19

சென்னையில் உள்ள வருமான வரித்துறை முன்பு ஆஜராவதற்காக, கனிமொழி சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கினார். அவரோடு சரத்குமார், அவரது கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யா ஆகியோரும் வந்திருந்தனர்.  டெல்லி சென்று திரும்பிய வீர மங்கை கனிமொழியை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு, அவரது தாயார் ராசாத்தி அம்மாள், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பூங்கோதை, தா.மோ.அன்பரசன் ஆகியோர் விமான நிலையம் வந்திருந்தனர்.  மாநிலப் போலீசார் முழு அளவில் குவிக்கப் பட்டு, கனிமொழியிடம் பத்திரிக்கையாளர்கள் பேசாத வண்ணம் தடுத்தனர்.

Tuesday, May 10, 2011

Fish

Fish: "Add a touch of nature to your page with these hungry little fish. Watch them as they follow your mouse hoping you will feed them by clicking the surface of the water."

2G-Flow Chart



ஆ. ராசாவின் சிறை வாழ்க்கை தகவல்கள்


ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இரவில் ஒரு போர்வையின் மீது மட்டுமே படுத்து உறங்குகிறார். சிறைக்குள் இவரின் ஒவ்வொரு பொழுதும் அதிகாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக உடற்பயிற்சி கூடம், நூலகத்துக்கு இவரை அனுப்புவதில்லை.
காலை 6.30 மணிக்கு ஒரு கப் டீயும், 2 ரொட்டி துண்டுகளும் கிடைக்கும். original_a.raja_4d4c142f2a156
காலை 9 மணிக்கெல்லாம் குளித்து தயாராகிவிட வேண்டும். இரண்டே இரண்டு சப்பாத்திகள் டிபனுக்கு கிடைக்கும். கொஞ்சம் சாதம், பருப்பு, காய்கறி பொரியல் கிடைக்கும். அதை மதிய உணவாக காலை 9 மணிக்கே வாங்கி வைத்து கொள்ள வேண்டும்.
நண்பகலில் பார்வையாளர்களை சந்திக்க அனுமதிக்கப்படுவார். பின்னர் மாலை 3 மணி வரை சிறை அறைகளுக்குள் அடைக்கப்பட்டிருப்பார்.
இந்த நேரத்தில் அவர் படிக்கலாம், தொலைக்காட்சி பார்க்கலாம். மாலை 3 மணிக்கு 2 பிஸ்கட்டும் ஒரு கப் டீயும் வழங்கப்படும்.
மாலை 6 மணிக்கெல்லாம் இரவு உணவை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு மீண்டும் சிறைக்குள் அடைக்கப்படுவார்.

25000 பேர் ”ஓ” போட்டார்கள்


சென்னை: சட்டசபை தேர்தலில், தமிழகம் முழுவதும், 24 ஆயிரத்து 591 பேர், "49 ஓ' வாய்ப்பை பயன்படுத்தியுள்ளனர். சட்டசபை தேர்தலில், அதிகபட்சமாக கீழ்வேளூர் தொகுதியில், 91.89 சதவீதமும், குறைந்தபட்சமாக, துறைமுகம் தொகுதியில், 63.65 சதவீதமும் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன.49-0-Rule
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: இந் த சட்டசபை தேர்தலில், யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்பதற்காக, "49 ஓ' வாய்ப்பை, 24 ஆயிரத்து 591 பேர், பதிவு செய்துள்ளனர். இதில், கே.வி.குப்பம் தொகுதியில் பதிவானவர்கள் விவரம் வரவில்லை. நெய்வேலி, ரிஷிவந்தியம், விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், விருது நகர், அருப்புக்கோட்டை ஆகிய தொகுதிகளில் ஒருவர் கூட, "49 ஓ' வாய்ப்பை பயன்படுத்தவில்லை.
மாவட்ட வாரியாக, "49 ஓ' பயன்படுத்தியவர்கள் விவரம் வருமாறு:
திருவள்ளூர் 1,347
சென்னை 3,407
காஞ்சிபுரம் 1,391
வேலூர் 464
கிருஷ்ணகிரி 381
தர்மபுரி 252
திருவண்ணாமலை 209
விழுப்புரம் 280
சேலம் 940
நாமக்கல் 530
ஈரோடு 1,133
திருப்பூர் 1,796
நீலகிரி 1,306
கோவை 3,061
திண்டுக்கல் 554
கரூர் 335
திருச்சி 1,046
பெரம்பலூர் 203
அரியலூர் 106
கடலூர் 430
நாகப்பட்டினம் 377
திருவாரூர் 181
தஞ்சை 543
புதுக்கோட்டை 331
சிவகங்கை 233
மதுரை 783
தேனி 336
விருதுநகர் 269
ராமநாதபுரம் 209
தூத்துக்குடி 879
திருநெல்வேலி 1,109
கன்னியாகுமரி 170
திருவாரூர் தொகுதியில் 59 பேரும், ஸ்ரீரங்கம் தொகுதியில் 31 பேரும், கொளத்தூர் தொகுதியில் 209 பேரும், மயிலாப்பூர் தொகுதியில் 260 பேரும், "49 ஓ' வாய்ப்பை பயன்படுத்தியுள்ளனர். மொத்த ஓட்டுப்பதிவை பொறுத்தவரை, துறைமுகம் தொகுதியில் தான் மிகக் குறைவாக 63.65 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கீழ்வேளூர் (தனி) தொகுதியில் 91.89 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன. இதில், 88.23 சதவீதம் ஆண்கள்; 95.57 சதவீதம் பெண்கள். அதிகபட்சமாக, 86 சதவீதம் ஓட்டுக்கள் பதிவான கரூர் மாவட்டத்தில், குளித்தலை தொகுதியில் தான் அதிகமாக 88.66 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன. தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட 2.88 லட்சம் அரசு ஊழியர்கள், 66 ஆயிரம் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் கியோர், தபால் ஓட்டு போட்டு உள்ளனர். இந்த தபால் ஓட்டுக்கள், இன்னும் வந்து சேரவில்லை. எட்டு ஓட்டுச்சாவடிகளில் மறு ஓட்டுப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தெரிந்த பின் தான், முழுமையான ஓட்டுப்பதிவு சதவீதம் வெளிவரும். இவ்வாறு பிரவீன்குமார் தெரிவித்தார்.
மேலும் ஒரு ஓட்டுச்சாவடியில் மறு ஓட்டுப்பதிவு: இதுபற்றி பிரவீன்குமார் கூறியதாவது: சங்கரன்கோவில் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட புளியம்பட்டி, ஊராட்சி தொடக்கப் பள்ளி, எண் 2ஏவி என்ற ஓட்டுச்சாவடியில் மறு ஓட்டுப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏழு ஓட்டுச்சாவடிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடப்பது போல, இந்த ஓட்டுச்சாவடிக்கும் ஓட்டுப்பதிவு நடக்கும். தொகுதியில் பதிவான மொத்த ஓட்டுப்பதிவு சதவீதத்தில் 15 சதவீதம் அதிகமாகவோ, குறைவாகவோ பதிவான ஓட்டுச்சாவடிகளின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. இதில், புளியம்பட்டியில், ஏஜன்ட்கள் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையிலும், பார்வையாளர் செய்த ஆய்வில், வாக்காளர்களை ஏஜன்ட்கள் ஓட்டு இயந்திரத்துக்கு அருகே அழைத்துச் சென்றதும், ஓட்டுப் போட உதவியதும், வீடியோவில் பதிவாகி இருந்தது. இதை ஓட்டுச்சாவடியின் தேர்தல் அதிகாரி தடுக்கவில்லை. மேலும், தனது டைரியில் இதுபற்றி குறிப்பிடவும் இல்லை. எனவே, அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர, வாக்காளர்களுக்கு உதவிய ஏஜன்ட்கள் மீதும் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும். இந்த ஓட்டுச்சாவடியில் மொத்தமுள்ள 855 ஓட்டுக்களில், 782 பதிவாகி இருந்தன. எனினும், மறு ஓட்டுப்பதிவின் போது, ஓட்டுப் போடாதவர்களும் ஓட்டுப் போடலாம். இவ்வாறு பிரவீன்குமார் தெரிவித்தார்.

2ஜி வழக்கு: ஆஜராவதில் கனிமொழிக்கு விலக்கு


புதுடெல்லி, மே 10,2011

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், மே 12 மற்றும் 13 ஆகிய இருநாட்களுக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், தமிழக முதல்வரின் மகளும், திமுக மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  ஸ்பெக்ட்ரம் வழக்கின் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள கனிமொழி மற்றும் கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் தங்களை சிபிஐ கைது செய்யாமல் இருக்க நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர்.


அந்த மனுக்களை விசாரித்த டெல்லி சிபிஐ நீதிமன்றம், மே 14-ம் தேதிக்கு உத்தரவை ஒத்திவைத்தது. அதுவரை இருவரும் தினமும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு கனிமொழியும் சரத்குமாரும் மே 7-ல் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், நீதிமன்றத்தில் இன்று ஆஜரான இருவரும் விலக்கு கோரும் மனுவை மீண்டும் புதிதாக தாக்கல் செய்தனர்.
இதனை ஏற்றுக் கொண்ட டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி, கனிமொழி மற்றும் சரத்குமார் ஆகியோர் மே 12, 13 ஆகிய இருநாட்களுக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திடுவதில் இருந்து விலக்கு அளித்தார். 

நன்றி : ஜூனியர்விகடன்

2009 பொதுத் தேர்தலில் தமிழகத்தில் விளையாடிய ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம்..!


என் இனிய தமிழ் மக்களே..!

2-ஜி அலைக்கற்றை விவகாரத்தில் பணம் எப்படி நடமாடியது என்பதற்கு ஆதாரமாக, ஒரு வாக்கு​மூலத்தை எடுத்துப் போடுகிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்!

'நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில், பண நடமாட்டத்தை முற்றிலுமாகத் தடுக்க முடியாவிட்டாலும், ஓரளவுக்குக் கட்டுப்படுத்தியது, தேர்தல் ஆணையம்.

ஆனால், இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முழுமையான பண பலத்தோடு நடந்தது. நாடாளுமன்றத் தேர்தல் பண விளையாட்டுக்கும், 2-ஜி ஊழலுக்கும் நேரடித் தொடர்பு உண்டு’ என்று அதிகார வட்டாரம் சொல்கிறது.

ஆ. ராசா - கனிமொழி சம்பந்தப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கிய முக்கிய சாட்சி ஒருவரின் வாக்குமூலத்தை இந்தப் பண விளையாட்டுக்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

க்ரீன் ஹவுஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பெரம்பலூர் துரைமங்களம், கவின் அமிர்தராஜ், சென்னை நந்தனத்தைச் சேர்ந்த வாடகை கார் டிரைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி, சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவரும் விருகம்பாக்​கத்தில் 'ஸ்ரீ’ என்கிற பெயரில் தனியார் துப்பறிவு நிறுவனம் நடத்தும் வரதராஜ், டிபி ரியாலிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த அஸ்ரஃப் போன்றவர்கள், 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக வாக்குமூலங்கள் அளித்துள்ளனர்.

அதன் அடிப்படியில்தான்,  பண விவகாரம் பற்றி பல பரபரப்பான விவரங்கள் டெல்லி வட்டாரத்தில் அடிபட ஆரம்பித்து உள்ளன. இது குறித்த முன்னோட்டமான தகவலை,  7.11.2010 தேதியிட்ட ஜூ.வி-யிலேயே கழுகார் சொல்லி இருந்தார். இப்போது, அதெல்லாம் சி.பி.ஐ-யின்  குற்றப் பத்திரிக்கையிலும் இடம் பெற்று உள்ளது.

''2009-ம் ஆண்டு ஒரு டவேரா வாகனத்தின் மூலம், சென்னை அண்ணா சாலையில் உள்ள மிகப் பிரபலமான கட்டடத்தில் இருந்து, 23 பெட்டிகளில் பணம் கீழ்ப்பாக்கம் ஏரியாவில் உள்ள ஒரு கட்டடத்​துக்குக் கொண்டு செல்லப்பட்டது!'' என்கிறது சி.பி.ஐ-க்கு அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அந்த வாக்கு​மூலங்கள்.

2008 டிசம்பர் முதல் 2009 ஆகஸ்ட்வரை கலைஞர் டி.வி-க்கு 200 கோடியை, டி.பி. ரியாலிட்டி பல தவணை​களில் கொடுத்தது என்று சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையில் சொல்லி இருக்கிறது. கலைஞர் டி.வி-க்குக் கொடுக்கப்பட்ட 200 கோடி, வங்கி வழியாக சென்றதால், பெட்டிகள் நடமாட்டத்துக்கும் அதற்கும் நேரடி சம்பந்தம் இருக்க முடியாது. ஆனால், அப்போது நடந்த தேர்தலுக்கும், டவேரா வாகனத்தில் பறிமாறப்பட்ட பணத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சி.பி.ஐ. சந்தேகப்படுகிறது. ஆனால், அதிலும் 'ஸ்பெக்ட்ரம்' புகழ் டி.பி. ரியாலிட்டி நிறுவனம் சம்பந்தப்பட்டு இருப்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்!

டி.பி. ரியாலிட்டியைச் சேர்ந்த அஸ்ரஃப், சென்னைக்கு வந்தாராம். அவர் பயணம் செய்வதற்காக, க்ரீன் ஹவுஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கவின் அமிர்தராஜ் ஒரு வாடகை காரை ஏற்பாடு செய்து கொடுத்து உள்ளார். அந்த காரில் பணம் எடுத்துச் செல்லப்பட்டு, பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில், அதாவது 2009, மே 10 அன்று நடந்த ஒரு சம்பவத்தை மட்டும் தனது குற்றப் பத்திரிகையில் சி.பி.ஐ. குறிப்பிட்டு உள்ளது. 

டவேரா வாகன டிரைவர் சொல்லும் தகவல் இதுதான்...

''அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு மும்பையில் இருந்து வந்த அஸ்ரஃபையும், அவருடன் வந்த சிலரையும் அழைத்துக் கொண்டு நான் சென்னை அண்ணா சாலையில் உள்ள அந்த முக்கிய கட்டடத்துக்குச் சென்றேன். அங்கே இருந்த பெட்டிகளை ஏற்றிக் கொண்டு சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை(ஈ.வெ.ரா.சாலை) சந்திப்பில் உள்ள ஒரு குறிப்பிட்ட கட்டடத்துக்கு நான்கு தடவைகள் போய் வந்தேன்.

முதல் டிரிப்பில், 7 பெட்டிகள்; 2-வது டிரிப்பில் 4 பெட்டிகள்; 3-வது டிரிப்பில் 8 பெட்டிகள்; 4-வது டிரிப்பில் 4 பெட்டிகளை கொண்டு சென்றேன். அந்த 4-வது டிரிப்பில் 3 பெட்டிகளை மட்டுமே அந்தக் கட்டடத்துக்குள் கொண்டு சென்றேன். ஒரு பெட்டி மட்டும் காரிலேயே இருந்தது. அந்தப் பெட்டியை யாரோ ஒருவர் வாங்கிச் செல்வார் என்று சொன்னதால் இறக்கவில்லை.

ஒவ்வொரு பெட்டியையும் இறக்கி, கட்டடத்துக்குள் கொண்டு போனபோது, அந்தப் பெட்டிகளுடன் அஸ்ரஃப் மற்றும் மூன்று பேர்கள் கூடவே பாதுகாப்புக்காகப் போனார்கள்.  ஒரு பெட்டி வாகனத்தில் அப்படியே இருந்தது. ஆனால், கொஞ்ச நேரத்தில் நான்காவது பெட்டியுடன் டவேரா வாகனத்தைக் காணவில்லை!'' என்று அந்த டிரைவர் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக சி.பி.ஐ. வட்டாரம் கூறுகிறது. 

பணம் கடத்தியவர்கள் விசாரித்தபோது டிரைவர், 'நான் பாத்ரூம் போனேன். திரும்பி வந்தபோது, காரைக் காணவில்லை’ என்று சொல்லி இருக்கிறார். உடனே, அண்ணா சாலை அலுவலகத்துக்கும், க்ரீன் ஹவுஸ் நிறுவனத்துக்கும் அந்த அதிர்ச்சித் தகவலைச் சொல்லி இருக்கிறார்கள்.

அஸ்ரஃப், உடனே இந்த சம்பவத்தை, மும்பையில் இருந்த டிபி ரியாலிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த ராஜீவ் அகர்வாலுக்கு (இவர் இப்போது கைதாகி சிறையில் இருக்கிறார்.) சொல்லி இருக்கிறார். காணாமல் போன பெட்டியில் மட்டுமே நாலு கோடி ரூபாய் இருந்ததாக அவர்கள் பேசிக் கொண்டார்களாம். இதன்படி பார்த்தால், மொத்தமாக 23 பெட்டிகளில் சுமார் 92 கோடி ரூபாய்வரை இருந்து இருக்கலாம் என்கிறது சி.பி.ஐ.

பணத்துடன் வாகனம் காணாமல் போனதில், வாகன ஓட்டுநர் மீதே க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸுக்கும், டி.பி. ரியாலிட்டி நிறுவனத்துக்கும் சந்தேகம். அதனால்,  டிரைவரைப் பிடித்துக் கொண்டனர். 'பணமும் காரும் எங்கே?’ என்று கேட்டு தொடர்ந்து சில நாட்கள் தங்கள் கஸ்டடியில் வைத்து டிரைவரை செமத்தியாகக் கவனித்து இருக்கிறார்​கள். அவர் சம்பந்தப்பட்ட இடங்​களிலும் பணத்தைத் தேடி இருக்கிறார்கள். ஆனால், பலன் கிடைக்க​வில்லை. அதன் பிறகே, அந்த டிரைவரை போலீஸிடம் ஒப்படைத்து உள்ளார்கள்.

போலீஸ்காரர்கள் கடுமையாக மிரட்டியும், டிரைவரிடம் இருந்து எந்தத் தகவலையும் பெற முடியவில்லை. அதனால், மீண்டும் டிரைவரை க்ரீன் ஹவுஸ் நிறுவனத்தாரே, தங்கள் கஸ்டடிக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தேர்தல் முடிந்த 2009 மே  13 அன்று டிரைவரை அழைத்துச் சென்ற கவின் அமிர்தராஜ், அந்த டிரைவரை வைத்தே, கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கார் திருடு போனது குறித்து புகார் கொடுக்கவைத்தார். ஆனால், அதில் பணம் இருந்ததாகச் சொல்லவில்லை. அதன் பிறகு, மும்பையில் இருந்து வந்திருந்த ராஜீவ் அகர்வாலிடம், டிரைவரை அழைத்துப் போய் இருக்கிறார். டிரைவர் மீது பரிதாபப்படுவதுபோல் நடித்த அகர்வால், அவரை அனுப்பி விட்டாராம். 

அதன் பிறகு டிரைவரை சுதந்திரமாகவிட்டார்கள் என்றாலும், க்ரீன் ஹவுஸ் ஆட்கள் பின் தொடர்ந்து உள்ளார்கள். 'நிச்சயமாக இந்த வாடகை கார் டிரைவர்தான் பணப் பெட்டியைக் கடத்துவதற்காக, கார் திருடு போனதாக நாடகம் ஆடுகிறார்’ என்றே இவர்கள் நம்பி இருக்கிறார்கள்.

அதனால், சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீ டிடெக்டிவ் ஏஜென்ஸியிடம், சொல்லி அதை விசாரிக்கச் சொல்லி இருக்கிறார்கள். 'எங்களுடைய பணத்தை, இந்த டிரைவர் திருடி மறைத்துவிட்டார். அதனால், அவரைத் தீவிரமாகக் கண்காணித்து உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும்’ என்று அந்த ஏஜென்சிக்கு மனு கொடுத்தார்கள்.

காணாமல்போன டவேரா வாகனம் 25 நாட்களுக்குப் பிறகு, சென்னை மூலக்கடைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. 'வாகனம் கிடைத்துவிட்டதால், நாங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பித் தர வேண்டும்’ என்று  அந்த டிரைவரை வற்புறுத்தி இருக்கிறார்கள்.
 
டிடெக்டிவ் ஏஜென்ஸியும் சில உண்மைகளைக் கண்டுபிடித்தது. மாத ஊதியம் வாங்கும் இந்த டிரைவரின் வாழ்க்கைத் தரத்தில் எதாவது மாற்றம் தென்படுகிறதா என்பதைக் கண்காணித்து, சில தகவல்களைக் கொடுத்தது.  

அந்த டிரைவரின் சகோதரரும் ஒரு கார் டிரைவர். ஆனால், அவர் திடீரென நான்கு கார்கள் வாங்கி இருப்பதோடு, ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கியது தெரிய வந்தது. அண்ணன் அடித்துக் கொடுத்த பணத்தை வைத்துத்தான் தம்பி வளர்ந்துள்ளார் என்று  டிடெக்டிவ் ஏஜென்சி கண்டு​பிடித்தது.

ஆனால், காணாமல் போன பணப் பெட்டி எங்கே என்பது​ பற்றியான உருப்படியான தகவல்​கள் இதுவரை கிடைக்க​வில்லை. இது குறித்து டிடெக்டிவ் ஏஜென்ஸி நிறுவனர் வரதராஜ் என்பவரிடமும் சி.பி.ஐ. வாக்கு​மூலம் வாங்கி இருப்ப​தாகத் தெரிகிறது.

இந்த விவகாரத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலோடு, டிபி ரியாலிட்டி, அண்ணா சாலையில் உள்ள அந்த முக்கிய அலுவலகம், 2009 தேர்தல், க்ரீன் ஹவுஸ் நிறுவனம் மற்றும் கலைஞர் டி.வி. போன்றவையும் பின்னிப் பிணைகின்றன.

இதில் இன்னொரு தகவலாக, க்ரீன் ஹவுஸ் நிறுவனத்தின் எம்.டி-யாக இருந்து தற்கொலை செய்துகொண்ட சாதிக் பாட்சாவின் மனைவியும், 'அந்த டிரைவர் பணத்துடன் மாயமானது’ குறித்து சி.பி.ஐ-யிடம் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறாராம்!

கவின் அமிர்தராஜ் மற்றும் சிலரும் கொடுத்த தகவல்களை சி.பி.ஐ., வாக்குமூலமாக குற்றப் பத்திரிகையில் சேர்த்து உள்ளது. ஆனால், இந்த வாக்குமூலங்கள் ஆ.ராசாவின் முன்னாள் தனி உதவியாளர் ஆசீர்வாதம் ஆச்சாரி மாதிரி நீதிபதியிடம் (சிஆர்.பி.சி. 164) கொடுத்தது அல்ல. இவர்கள் சி.பி.ஐ-யிடம் (சிஆர்.பி.சி. 161) வாக்குமூலமாகக் கொடுத்துள்ளார்கள்.

டெல்லி, மும்பை வழியாக சென்னையில் எந்த மாதிரி எல்லாம் பணம் பாய்ந்துள்ளது... அதில் தேர்தல் களத்தில் பணம் பாய்ந்த திசைகள் என்னென்ன என்பதற்கு ஆதாரமாக சி.பி.ஐ. இந்த சாட்சியங்களைக் கொண்டு வரப் போகிறது!

நன்றி : ஜூனியர்விகடன் - 11-05-2011


TAX...... TAX......... TAX............ What a Great job from Govt. of India !!!!!!

What a Great job from Govt. of India !!!!!! for we Indians   

  
Must Read 
1)      Qus.: What are you doing?
Ans.: Business.
Tax : PAY PROFESSIONAL TAX
  
2)      Qus.: What are you doing in Business?
Ans.: Selling the Goods.
Tax : PAY SALES TAX
  
3)      Qus.: From where are you getting Goods?
Ans.: From other State/Abroad
Tax : PAY CENTRAL SALES TAXCUSTOM DUTY & OCTROI
  
4)      Qus.: What are you getting in Selling Goods?
Ans.: Profit.
Tax : PAY INCOME TAX
  
5)      Qus.: How do you distribute profit ?
Ans : By way of dividend
Tax : PAY DIVIDEND DISTRIBUTION TAX
  
6)      Qus.: Where you Manufacturing the Goods?
Ans.: Factory.
Tax : PAY EXCISE DUTY
  
8)      Qus.: Do you have Staff?
Ans.: Yes
Tax:  PAY STAFF PROFESSIONAL TAX
  
9)      Qus.: Doing business in Millions?
Ans.: Yes
Tax : PAY TURNOVER TAX   ?
Ans : No
Tax : Then pay Minimum Alternate Tax
  
10)    Qus.: Are you taking out over 25,000 Cash from Bank?
Ans.: Yes, for Salary.
Tax : PAY CASH HANDLING TAX
  
11)    Qus.: Where are you taking your client for Lunch & Dinner?
Ans.: Hotel
Tax : PAY FOOD & ENTERTAINMENT TAX
  
12)    Qus.: Are you going Out of Station for Business?
Ans.: Yes
Tax : PAY FRINGE BENEFIT TAX
  
13)    Qus.: Have you taken or given any Service/s?
Ans.: Yes
Tax : PAY SERVICE TAX
  
14)    Qus.: How come you got such a Big Amount?
Ans.: Gift on birthday.
Tax : PAY GIFT TAX
  
15)    Qus.: Do you have any Wealth?
Ans.: Yes
Tax : PAY WEALTH TAX
16)    Qus.: To reduce Tension, for entertainment, where are you going?
Ans.: Cinema or Resort.
Tax : PAY ENTERTAINMENT TAX
17)    Qus.: Have you purchased House?
Ans.: Yes
Tax : PAY STAMP DUTY & REGISTRATION FEE
18)    Qus.: How you Travel?
Ans.: Bus
Tax : PAY SURCHARGE
19)    Qus.: Any Additional Tax?
Ans.: Yes 
Tax : PAY EDUCATIONAL, ADDITIONAL EDUCATIONAL &
SURCHARGE ON ALL THE CENTRAL GOVT.'s TAX !!!
20)    Qus.: Delayed any time Paying Any Tax?
Ans.: Yes
Tax : PAY INTEREST & PENALTY
21)    INDIAN :   Can I die now??
Ans : No,  wait we are about to launch the FUNERAL TAX
--------------------------------------------------------------------------------------------------
2) Petrol Price in INDIA
Pakistan             Rs. 26 
Bangladesh        Rs. 22 
Cuba                  Rs. 19 
Nepal                  Rs. 34 
Burma                Rs. 30 
Afghanistan       Rs. 36 
INDIA                Rs. 63.40 



3) BASIC COST  PER 1 LITRE 16.50
Centre tax    11.80% 
Excise duty    9.75% 
Vat cess               4% 
State tax             8 % 
Total     Rs.    50.05 


Now extra 13.35 Rs, PER 1 LITRE .......????? 


What a Great job from Govt. of India … 
Pass this messages to ALL INDIANS………………… 

சன் நெட்வொர்க் மற்றும் கலைஞர் டிவி -இன் முக்கிய செய்திகள்


சன் நெட்வொர்க் மற்றும்   கலைஞர் டிவி -இன் முக்கிய செய்திகள்

 

1. ரஜினி காந்த் மருத்துவ மனையில்  அனுமதி.




2. எங்கேயும் காதல் திரைப்படம் ரிலீஸ்.


இந்த மாதிரி முக்கிய செய்திகள் சொன்ன சன் நெட்வொர்க் மற்றும் கலைஞர் டிவி ஆகிய சேனல் -ல்

கனிமொழி பற்றி ஒரு நியூஸ் கூட இல்லையா?



 

என்ன கொடுமை சார் இது?
 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள சன் டிவி மற்றும் கலைஞர் டிவி பாருங்கோ...................