நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Sunday, July 31, 2011

ஈரோடு அரசு மருத்துவமனை கொடூரம்

என் நண்பரும் ,சித்தோடு காதுகேளாதோர் பள்ளி ஆசிரியருமான திரு செல்வம் அவர்கள் மனைவி நிறைமாத கர்ப்பமாக இருந்தார்.அவர் சித்தோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.பிரசவ வலி வந்ததும் சித்தோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அறுவை சிகிச்சைதான் செய்யவேண்டும்.அதனால் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு செல்ல எழுதி தருகிறோம் என எழுதி கொடுத்தனர்.

அதன்படி அவர்களும் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு செல்ல,அங்கு வரவேற்பாக கடும் வசவுகள் தான் கிடைத்தன...சித்தோடு ஜி.ஹெச்சுக்கு இதே பொழப்பா போச்சு.முடியாத கேஸ் எல்லாம் எங்க தலையில கட்டிடுறாங்க..அப்புறம் எதுக்கு அவங்க அங்க இருக்காங்க..இங்க பாரு டெலிவரி டேட் தாண்டி போயிருச்சி..அதனால தாயும் சேயும் பொழக்கிறது கஸ்டம்.ஜன்னி கண்டுடும்..என பயமுறுத்தி இருக்கிறார்கள் டாகடர்களும் நர்சுகளும்.

உடனே என் நண்பர் மனைவி முடியாதுன்னா சிகிச்சை தர முடியாதுன்னு எழுத்து பூர்வமா எழுதி கொடுங்க..என்றிருக்கிறார்.
உடனே டாக்டர் கோபமாகி ஓ..நீ அவ்வளவு பெரிய தில்லாலங்கடி விவரமா..சரி இங்கியே அட்மிட் பண்றோம் என பல்லை கடித்துக்கொண்டு அட்மிட் செய்தனர்.

அப்போது டூட்டியில் இருந்த கனகா நர்ஸ்,பெட்டில் இருந்த என் நண்பர் மனைவியை பார்த்து என்ன நைட்டி போட்டுகிட்டு வந்திருக்க..ஏன் சேலை கட்ட மாட்டியா..நீ என்ன வெளிநாட்டுலியா பொறந்த..?என காது கூசும்படி நாகரீகம் இல்லாமல் பேசியிருக்கிறார்.எனக்கு இதுதான் வசதியா இருக்கு..என இவர் சொல்ல...இரு உன்னை வெச்சிகிறேன் என பரம எதிரியாய் முறைத்திருக்கிறார் அந்த நர்ஸ்.

அதன் பின் நைட் டூட்டிக்கு வந்த இன்னொரு நர்ஸிடம் பணியை ஒப்படைக்கும்போது அதோ அந்த பெட்ல படுத்திருக்கிற மேனகா (என் நண்பர் மனைவி பெயர்)ரொம்ப வாய்க்கொழுப்பா பேசுறா..நைட்டிதான் போடுவாளாம்.சித்தோட்டுல இருந்து தள்ளி விட்ட கேசு...பார்த்து பேக்கப் பண்ணிரு..என்றிருக்கிறார்.இதை அருகில் இருந்து கேட்டுவிட்ட என் நண்பர் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்.

உடனே தன் மனைவியிடம் நடந்ததை சொல்லி இங்கு தரும் மாத்திரை,மருந்து,ஊசி எதுவும் போட்டுக்கொள்ள வேண்டாம்..உடனே டிஸ் சார்ஜ் ஆகிடலாம் என சொல்லிவிட்டு அவசர அவசரமாக அங்கிருந்து திருப்பூர் சென்றனர்.அங்கு தனியார் மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை சுகப்பிரசவம் ஆனது....


பேக்கப் பண்ணிடு என சொன்னால் என்ன அர்த்தம்...முடிச்சிரு என்று அர்த்தமா...என சொல்லி சொல்லி என் நண்பர் கண்கலங்குகிறார்...தனியார் மருத்துவமனை செல்லும் வசதியுள்ள என் நண்பர் தன் மனைவியை காப்பாற்றிக்கொண்டார்.சாப்பாட்டுக்கே வழியில்லாத குப்பன்,சுப்பன் தன் மனைவியை இந்த இரக்கமற்றவர்களிடமிருந்து எப்படி காப்பாற்றிக்கொள்வார்கள்..?
 
Thanks to Sathis777

No comments:

Post a Comment