ஹசாரேவுக்கு ஆதரவாக சென்னையில் திரையுலகினர் உண்ணாவிரதம்
ஊழலுக்கு எதிரான வலுவான லோக்பால் மசோதா கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவரும் அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் திரையுலகைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் சென்னையில் இன்று உண்ணாவிரதம் நடத்தி வருகின்றனர்.அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் காலை 9 மணியில் இருந்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.இதில் நடிகர் தியாகு, இயக்குநர்கள் மனோபாலா, சேரன், தயாரிப்பாளர்கள் சித்ராலட்சுமணன், ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்டோர் ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத பந்தலில் பேசினர்.எனினும் தமிழ் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் யாரும் இந்த உண்ணாவிரதத்துக்கு வரவில்லை.
No comments:
Post a Comment