





தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். அது
உண்மைதானோ என்று நினைக்கத் தோன்றுகிறது. அரசியல்வாதிகள் பலருக்கு எந்தப்
பிரிவின் படி தான் பதவியேற்றிருக்கிறோம் என்பது கூடத் தெரியாது. ஏன் இந்திய
அரசியலமைப்புச் சட்டம் என்றால் கூட என்னவென்று தெரியாது. ரவுடியாய்
திரிந்தவர்களுக்கு வேண்டுமானால் கிரிமினல் சட்டங்கள் பற்றிய சில விபரங்கள்
தெரியும். இந்திய அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர் வக்கீல்களாய் இருப்பதை
இவ்விடத்தில் வாசகர்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.
இந்த வக்கீல்கள் தான் பெரும் பெரும்
பதவிகளுக்கு வருகின்றார்கள். அதற்கு ஒரு உதாரணம் உலகத்தில் இதுவரை எவருமே
செய்யாத ஊழல் புகழ் மன்னன் திரு ராஜா. அதை மூடி மறைத்துக் கொண்டிருக்கும்
திரு ப.சிதம்பரம் போன்றோர்கள். மக்கள் கவனிக்க வேண்டிய அம்சம் இது.
வக்கீல்கள் சரியில்லை என்றால் இந்தியாவை பார்ட் பார்ட்டாக பிரித்து விற்று
விடுவார்கள். இப்போதைய மன்மோகன் சிங் அரசு அதைத்தானே செய்து
கொண்டிருக்கின்றது என்கின்றீர்களா?
ஒன்றுமே தெரியாமல் வரும் அரசியல்வாதிகளை
ஊழல்வாதியாய் மாற்றுவதே “அரசு அதிகாரிகள்” தான் என்பதை நாமெல்லாம் அறிவோம்.
அப்படிச் செய்யும் அரசு அதிகாரிகளின் நிலையோ எதிர்காலத்தில் சிக்கி
சின்னாபின்னமாகி விடுகிறது. இப்படி ஊழலுக்குத் துணை போன ஒரு அரசு அதிகாரியை
எதிர்கட்சி அமைச்சர் ஒருவர், அதிகாரிக்குத் தெரியாமலே அவரின் மனைவியை
ஆட்டயப் போட்டு விட்டார். இப்போது அதிகாரி “தற்கொலை” செய்து கொள்ளும் மன
நிலையில் இருக்கிறார் என்று கேள்விப்பட்டேன்.
சண்டைக்காரனை நம்புவதை விட சாட்சிக்காரனை
நம்பலாம் என்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் சண்டைக்காரர்களுக்கு ஒன்றுமே
ஆவதில்லை. சாட்சிக்காரர்கள் தான் வம்பில் மாட்டிக் கொள்கிறார்கள். வம்பு
என்றால் சாதாரண வம்பு இல்லை. செத்துப் போகின்றார்கள். அரசியல்வாதிகள் ஊழல்
செய்தால் அவர்களுக்கு துணை போனவர்களின் பரிதாபக் கதையை ஒரு பத்திரிக்கை
விரிவாய் எழுதி இருக்கிறது. அதை இந்த இணைப்பில் படித்துக் கொள்ளுங்கள்.
ஊழலுக்குத் துணை போகும் அரசு அதிகாரிகள்
இனி கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் இருந்தாக வேண்டும் போலிருக்கிறது.
அதிகாரிகள் மட்டுமல்ல தனி மனிதர்களும் கூடத்தான். இல்லையென்றால் “சாதிக்
பாட்சா” போல அனாதையாய் தூக்கில் தொங்க நேரிடும்.
இது கல்கி காலம் போலும். பழிக்குப் பழி வாங்க முனைகிறார் கடவுள். ஒழுங்கற்றவர்களுக்கு “மரணம்” பரிசாய் கிடைக்கும் போல.
- பஞ்சர் பலராமன்
பட இணைப்பு உதவி : தி சண்டே இந்தியன் பத்திரிக்கை
Thanks to அனாதி
No comments:
Post a Comment