நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Thursday, June 9, 2011

ஈழத்தமிழருக்கு குரல் கொடுத்த தமிழ்க அரசு!

இலங்கையில் சம உரிமைக்காக போராடி வரும் தமிழர்களை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டது. பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள், மருத்துவமனைகள் மீதும் குண்டுகள் வீசப்பட்டன.

 
இலங்கை அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக ஐநா சபை பொதுச்செயலரால் நியமனம் செய்யப்பட்ட குழு கண்டறிந்துள்ளது. எனவே, போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐநா சபையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

மேலும், சிங்களர்களுக்கு இணையாக, தமிழர்களுக்கு அனைத்து குடியுரிமைகளும் வழங்கப்பட வேண்டும். இதற்காக, இலங்கை அரசின் மீது மற்ற நாடுகளுடன் இணைந்து பொருளாதாரத் தடையை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை தமிழக சட்டப்பேரவை கேட்டுக் கொள்கிறது


அஞ்சு வருசத்துல தமிழின தலைவர் முதல்வரா இருந்தப்ப..இது போல தீர்மானம் நிறைவேற்றி இருப்பாரா..? ஜெயலலிதா இலங்கை தமிழ்ர்களுக்காக கொடுத்த குரல் எப்படி..சிம்ம குரல்தான்...ஜெ...அதிரடி..எப்பவும் கலக்கல்தான்....ஈழத்தமிழர்களுக்காக முதன்முதலில் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்..நன்றி முதல்வரே!!

Thanks
Sathis777

No comments:

Post a Comment