நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Thursday, June 9, 2011

மாறன் சகோதரர்கள் கொலை மிரட்டல்: ஏர்செல் முன்னாள் தலைவர் புகார்

தனக்கு, மாறன் சகோதரர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக சிபிஐ விசாரணையின்போது ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவன முன்னாள் தலைவர் சி.சிவசங்கரன் கூறியதாக தெரியவந்துள்ளது.2001 ஆண்டு முதல் 2007-ம் ஆண்டுவரை 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தும்படி சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 http://inthiya.in/ta/wp-content/uploads/2011/05/kalanidhi+-dayanidhi-Maran.jpg
இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஏர்செல் முன்னாள் தலைவர் சிவசங்கரனிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. 

http://www.firstpost.com/wp-content/uploads/2011/06/dayanidhimaran2.jpg
அப்போது, அவர் குறிப்பிடுகையில், தனது நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மாக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்துவிடும்படி அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் இதை தயாநிதி மாறன் மறுத்துள்ளார்.

No comments:

Post a Comment