யோகா குரு ராம்தேவ் டில்லியிருந்து நள்ளிரவில் அப்புறப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்னா ஹசாரே இன்று காலை 10 மணிக்கு மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி உள்ளார். மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. மாலை 6 மணி வரை இந்த போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி வந்துடுச்சி..இனியும் காங்கிரஸ் ஏமாத்தவோ..ஊழல்வாதிகளுக்கு துணை போகவோ முடியாது..கறுப்புப்பணம் வைத்திருக்கும் முக்கிய மந்திரிகளும் இனி அவ்வளவுதான்..உண்மையை உணர்ந்து மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தா ஓகே...இல்லைன்னா கட்சி மொக்கையாகிடும்...!ஏற்கனவே உலகளவில் இந்தியாவின் அரசியல் நாறிகிட்டு இருக்கு..இனியும் ஆமை வேகத்துல போகாம ஜெட் வேகத்துல நடவடிக்கை எடுக்க வேண்டும்!!
No comments:
Post a Comment