நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Thursday, June 9, 2011

கனிமொழி அவ்வளவுதானா..? அரசியல் அதிரடி செய்திகள்

கனிமொழி திஹார் பறவை;

டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி, தனது கணவர் வேலை காரணமாக வெளிநாடு சென்றுள்ளதால் ‌தனது மகனை கவனித்து கொள்வதற்காக தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி மனுவில் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் கனிமொழிக்கு ஜாமீன் வழங்க கூடாது என சிபிஐ தரப்பில் பலமாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் இம்மனுவை விசாரித்த டில்லி ஐகோர்ட், கனிமொழிக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
கண்ணீர் விட்ட ராஜாத்தி அம்மாள்: மகளின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டதை கேட்ட கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள், கோர்ட் வளாகத்தில் கண்ணீர் விட்டு அழுதார்.

என்ன செய்றது,,,,இன்னிக்காவது ஜாமீன் கிடைக்கும்னு பார்த்தோம்..ஆனா கிடைக்கலையே ராஜாத்தியம்மா....கேஸ் ரொம்ப ஸ்ட்ராங்க் போல..நீராராடியா கிட்ட இனிமே பேசுவீங்க..?
----------------
பொன்முடிக்கு ஆப்பு..!
திருவாரூரில் குற்றம் செய்யாத கனிமொழி திஹார் சிறையில் இருப்பதை சொல்லி,கண்ணிர் விட்ட கருணாநிதிக்கு பின் பேசிய,பொன்முடி வந்தவுடன் வேலையை காட்டிவிட்டார் ஜெயலலிதா...அந்த அம்மாவுக்கு பல மொழிகள் தெரியும் என சொல்கின்றனர்.தொழிலுக்காக பல மொழிகள் தெரிந்திருக்க வேண்டும்.நான் படத்தில் நடிப்பதை சொல்கின்றேன்..என டபுள் மீனிங்கில் பேசினார்..உளவுத்துறை இதை நோட் செய்து முதல்வருக்கு அனுப்பி விட்டது...நேற்று திருவாரூரில் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்ட குடவாசல் ராஜேந்திரன் பொன்முடி மீது புகார் கொடுத்துள்ளார்...முதல்வரை தரக்குறைவாக பேசியதாக..மூன்று செக்‌ஷன்களில் கேஸ் பதிவாகிவிட்டது...எந்த நேரமும் பொன்முடி கைது செய்யப்படும் நிலை...

இரண்டு முறை முதல்வராக இருந்து மூன்றாவது முறையாகவும் முதல்வர் ஆனவரை இன்னும் நடிகை என்றே கொச்சையாக பேசியவருக்கு இது தேவைதான்!!

Thanks to Sathis777

No comments:

Post a Comment