நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Friday, June 10, 2011

ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் கனிமொழி, சரத்குமார் ரெட்டி அப்பீல்

டெல்லி: ஜாமீன் வழங்கக் கோரி திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி மற்றும் கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி ஆகியோர் சார்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


Kanimozhi


2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி இருவரும் கடந்த மே 20ம் தேதி கைது செய்யப்பட்டனர். இருவரும் தற்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். கனிமொழி தனது மனுவில் தனக்கு சிறிய வயதில் மகன் உள்ளான். ஒரு தாயாக உடனிருந்து அவனைக் கவனிக்க வேண்டும். எனது கணவர் வெளிநாட்டில் தொழில் செய்வதால் அடிக்கடி வெளிநாடு செல்ல வேண்டியுள்ளது. எனவே எனக்கு ஜாமீன் தர வேண்டும் என்று கோரியிருந்தார்.

இருப்பினும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலால் இருவரும் பலனடைந்திருக்கலாம் என்பதற்கான பூர்வாங்கம் இருப்பதாலும், இருவரையும் வெளியில் விட்டால் சாட்சிகளைக் கலைக்கலாம் என்ற வாய்ப்பு இருப்பதாலும் இருவருக்கும் ஜாமீன் வழங்க முடியாது என்று உயர்நீதிமன்றம் கூறி விட்டது.

No comments:

Post a Comment